திருவில்லிபுத்தூர்,ஏப்.7- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழ கத்தில் 39 ஆது ஆண்டு விளையாட்டு விழா துணைத் தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. துணைவேநாதர் முனை வர் எஸ் .நாராயணன் , பதிவா ளர் முனைவர் வி.வாசுதே வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் நல இயக்குநர் எம்.முத்துக்கண்ணன் வரவேற்றார். விருதுநகா் மாவட்ட விளையாட்டு- இளைஞர் நல அதிகாரி எஸ்.குமாரமணிமாறன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள்,சான்றிதழ்கள் , மெடல்களை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் எஸ்.விஜயலட்சுமி உரை யாற்றினார். விழாவில் மாண வியரின் சிலம்பாட்டம், யோகா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. “ஒட்டு மொத்த சாம்பி யன்ஷிப்” கோப்பையை கணினி அறிவியல் பொறி யியல் துறை மாணவர்களும் இரண்டாம் இடத்தை கலச லிங்கம் பிஸினஸ் ஸ்கூல் மாணவர்களும் வென்றனர். பெண்கள் தனிநபர் தடகளப்போட்டியில் மாணவி ஏ.மலர்கொடி, ஆண்கள் தனிநபர் தடகள போட்டியில் மாணவர் கே.பாலமுருகன் ஆகியோர் வென்றனர். உடற்கல்வி இயக்குநர் சி.சிதம்பரம்,நீச்சல் பயிற்சி யாளர் உதயகுமார் மற்றும் மாணவர்கள் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.