இருக்கன்குடி கோவில் உண்டியலில் ரூ.38 லட்சம், 180 கிராம் தங்கம்
சாத்தூர், மார்ச் 15- சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன்கோவிலில் உண்டியல் என்னும் பணி நடை பெற்றது. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் துணை ஆணையர், உதவி ஆணையர், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர் கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. அதில் நிரந்தர உண்டியல்கள்(10) மூலம் ரூ.35லட்சத்து 97ஆயிரத்து 202ம், கோசாலை உண்டியல்-1 மூலம் ரூபாய் ஒரு லட்சத்து 70ஆயிரத்து 637 என மொத்தம் என ரூ. 37 லட்சத்து 67 ஆயிரத்து 839ம், 179.96 கிராம் பலமாற்று பொன், 551.84 கிராம் பலமாற்று வெள்ளியும் இருப்பது தெரிய வந்தது.
கடமலை அருகே சுடுகாடு இடத்தில் கட்டுமானப்பணி கூடாது ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாசில்தார் எச்சரிக்கை
கடமலைக்குண்டு, மார்ச் 16- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே தேவராஜ் நகர் கிராமத்திற்கான சுடுகாட்டை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதாக ஆண்டிபட்டி தாசில்தா ருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் நேற்று ஆண்டிபட்டி தாசில்தார் சுந்தர்லால் தேவராஜ்நகர் கிராமத்திற்கு சென்று சுடு காட்டை ஆய்வு மேற்கொண்டார். அப்போது 40 ஆண்டு களுக்கு மேலாக பொதுமக்கள் சுடுகாடு மற்றும் அதற்கு அருகே உள்ள பாறையை நெல் கதிர் அடிக்கும் களமாக பயன்படுத்தி வருவதாகவும் தற்போது திடீரென தனி நபர்கள் இந்த இடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்ட முயற்சிப்பதாகவும் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முறையாக அளவீடு செய்த பின்பு பிரச்ச னைக்கு உரிய தீர்வு காணப்படும் என தாசில்தார் தெரி வித்தார். மேலும் அளவீடு பணிகள் நடைபெற்று முடியும் வரை எந்தவித கட்டுமான பணிகளும் நடைபெறக் கூடாது என ஆக்கிரமிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது கடமலைக்குண்டு கிராம நிர்வாக அலு வலர் பொறுப்பு விஜய் உடனிருந்தார்.
தோழர் சிங்கராஜ் காலமானார்
மதுரை, மார்ச் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா தனியாமங்கலம் கட்சிக் கிளை உறுப்பினர் பி.டி.சிங்க ராஜ் (70) காலமானார். அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பி.டி.சிங்கராஜூக்கு மனைவி மற்றும் 1மகள் உள்ளனர்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து
சிவகாசி, மார்ச் 16- சிவகாசி அருகே உள்ளது வி.சொக்கலிங்கபுரம். இங்கு கமலக் கண்ணன் என்பவருக்கு ஞானவேல் பட்டாசு ஆலை இயங்கி வரு கிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகளில் 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில் பேன்சி ரக பட்டாசுக்கு ரசாயன மூலப் பொருட் களை செலுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஜமீன்சல்வார்பட்டி யை சேர்ந்த மரீஸ்வரன் (42) என்ற தொழிலாளி தீக்காயமடைந்தார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள் சிவாகாசி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் அறை சேதமடைந்தது.
குறைவான கமிஷனால் நெல் கொள்முதலை தாமதப்படுத்தும் அதிகாரிகள்
சிவகங்கை, மார்ச் 16- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் திரு மாஞ்சோலையில் நெல் கொள்முதல் மையத்தில் ஒரு சிப்பத்துக்கு ரூ.15 மட்டுமே வழங்கப்படுவதால் நெல் கொள்முதல் மைய அதிகாரி கள் கொள்முதல் செய்வதை தாமதப்படுத்துகிறார்கள் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் நீலமேகம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரில், திருமாஞ்சோலையில் நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5000 நெல்மூடைகளுக்கு மேல் தேங்கிக்கிடக்கிறது. இதற்கு காரணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ. 40 முதல் 45 வரைக்கும் ஒரு சிப்பத்திற்கு கமிஷன் பெற்று வருகிறார்கள். இதனை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தினோம். அப்போது சிவில் சப்ளை கார்ப்ப ரேஷன் மண்டல மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் காலங்க ளில் இது போன்ற குறைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதாக நட வடிக்கை எடுப்பதாக மண்டல மேலாளர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ரூ.40 வாங்குவதற்கு பதிலாக ரூ.15 மட்டுமே வாங்கி வருகிறார்கள். ஆனால் உணவுத்துறை அமைச்சர் ஒரு ரூபாய் கூட வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். திருமாஞ்சோலையில் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யாமல் கால தாமதம் செய்வதற்கு காரணமே குறைந்த அளவு கமிஷன் தொகை என்பதால் தான். சிவில் சப்ளை அதிகாரிகள் திட்டமிட்டு தாமதப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அகற்றக்கோரி போராட்டம்
விருதுநகர், மார்ச் 14- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ளது வாகைக்குளம். இங்கு குடியிருப்பு பகுதியில் அரசு மது பானக் கடை அமைக்க அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என பல்வேறு போராட்டங்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்துடன் இணைந்து நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் மக்கள் எதிர்ப்பையும் மீறி மாவட்ட நிர்வாகம், அங்கு டாஸ்மாக் கடையை திறந்தது. இதையடுத்து, கடையை அகற்றக் கோரி அங்கு பெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர் களை போலீசார் வலுக்கட்டாயமாக அராஜகமான முறை யில் கைது செய்தனர். இந்தநிலையில், டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. முருகன், எஸ்.லட்சுமி, வட்ட செயலாளர் மார்கண்டேயன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தெய்வானை, சுரேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல் கொள்முதல் மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சிவகங்கை, மார்ச் 16- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலை யங்களில் விற்பனைக்கு நெல்லை கொண்டு வரும் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ஜான் பிரிட்டோ ,தலைமையில் போலீசார் காளையார் கோவிலை அடுத்துள்ள புல்லுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நெல் விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளிடம் ஒரு மூடைக்கு ஒரு 30 ரூபாய் வீதம் வசூலிப்பது தெரிந்தது. வியாழனன்று ஒரு நாளில் மட்டும் இங்கு 322 மூடை நெல் விவசாயிகளிடம் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக பெறப்பட்ட தொகை ரூ9660-ஐ லஞ்ச ஒழிப்பு போலீ சார் பறிமுதல் செய்தனர். நெல் கொள்முதல் நிலையத்தின் கிளார்க்காக அர்ஜுனன் (34) என்பவர் பணிபுரிந்து வருகிறார். தற்காலிக பணியாளரான இவர் கடந்த மாதம் ஆறாம் தேதி தான் பொறுப்பேற்றுள்ளார் என்றும் தெரிந்தது. அவர் பொறுப்பு ஏற்ற பின்னர் இதுவரை அவருடைய வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலமாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் வரை செலுத்தப்பட்டதையும் லஞ்ச ஒழிப்பு போலீ சார் கண்டுபிடித்தனர். இந்த பணம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக பெறப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் மீது வழக்கு
மதுரை, மார்ச் 16- மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வ ரன் விமர்சித்து பேசினார். இதுதொடர்பாக இரண்டு தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தது. எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக் குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரை பழங்கா நத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் திமுக அரசை கண்டித்து கடந்த 13-ம் தேதி ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதில் மதுரை மாநகர், புற நகர், மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் காவல்துறை அனுமதி இன்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத் தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அதி முக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர். பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அதிமுகவினர் 1000 பேர் மீது சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.