சங்பரிவாரக்கும்பல்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆம் ஆண்டுகள் ஆனதையொட்டி கறுப்பு தினம் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மதுரை தெற்கு வெளிவீதி கிரைம் பிரான்ஜ் அருகில் செவ்வாயன்று நடைபெற்றது. தலைவர் சேக் இப்ராஹீம் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாநகர துணை மேயர் டி. நாகராஜன், யு.எஸ்.அபுதாகீர் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் கோவை உமர் நிறைவுரையாற்றினார் .ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.