மோடி வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 30 பேர் கைது
திண்டுக்கல், நவ.11- பிரதமர் மோடி வருகையை எதிர்த்து திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோடி கோ பேக் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் காங்கிரஸ் கட்சியினர் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்ட னர். முன்னதாக கட்சியின் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அதிகாலை 5 மணி அளவில் கைது செய்யப் பட்டார்.
அரிசி கடத்தல் தடுப்பு குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
தேனி,நவ.11- தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தமிழக -கேரள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது தமிழகம் சார்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுப்பிரமணி, தேனி மாவட்ட வழங்கல் அதிகாரி சாந்தி, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுப்புலட்சுமி, உத்தமபாளையம் வட்ட வழங்கல் அதிகாரி பாண்டி, போடி வட்ட வழங்கல் அதிகாரி ராமராஜ், கேரளா சார்பாக இடுக்கி ஏஎஸ்பி சுனீஷ்பாபு, கம்பம்மெட்டு காவல் ஆய்வாளர் லால்பாய், மனோஜ் மாத்யூ, உடும்பன்சோலை தாசில்தார் ராஜா, பீர்மேடு துணை தாசில்தார் ஜீவா, உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகா ரிகள் இணைந்து செயல்படுவது, அரிசி கடத்தல் குறித்து தகவல் கிடைத்தால் இரு மாநில போலீசாரும் பகிர்ந்து கொள்வது, குற்றவாளிகளை பிடிக்க இரு மாநில போலீ சாரும் ஒத்துழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
லோயர் கேம்பில் விதைப்பந்து வீசிய பள்ளி மாணவர்கள்
தேனி. நவ. 11- ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில், மர அடர்த்தி குறைந்த லோயர்கேம்ப் வனப்பகுதியில் விதைப் பந்துக்களை வீசினர். தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் லோயர் கேம்பில் நடை பெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக மர அடர்த்தி குறைந்த வனப்பகுதியில் மாணவர்கள் விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்ட நாட்டு நலப் பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் நேரு ராஜன் விதைப்பந்துகளை பள்ளி யின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜஸ்டின் மூலமாக மாணவர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த விதைப்பந்துகளில் புங்கை மரம்,தேக்கு, தோத கத்தி, வேங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மர விதைகள் வைத்து விதைப்பந்து உருண்டைகள் உருவாக் கப்பட்டிருந்தன.
பெரியகுளத்தில் வழிப்பறி 4 வாலிபர்கள் கைது
தேனி, நவ.11- பெரியகுளத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்க ளை காவல்துறையினர் கைது செய்தனர். பெரியகுளம், வடகரையைச் சேர்ந்தவர்கள் சூர்யா (31), பஷீர்அகமது(30). இவர்கள், பெரியகுளம் நகராட்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த சடையாண்டி என்பவரை தாக்கி, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த பணம் மற்றும் கைபேசியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் ரோந்துப் பணியிலிருந்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். சூர்யா, பஷீர்அகமது ஆகியோர் மீது பெரியகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப் பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக் கப்பட்ட சூர்யா, பஷீர்அகமது ஆகியோர், கடந்த சில நாட்களுக்கு முன் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பெரியகுளம், வடகரை, அரண்மனைத் தெருவைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர், அதே பகுதியில் சாலை யில் நடந்து சென்றுள்ளார். அப்போது பெரியகுளம், வட கரையைச் சேர்ந்த மரிய பால்தினகரன்(28), ஜோசப் கார்த்திக்(27) ஆகியோர், மாரி செல்வத்தை வழிமறித்து அவரிடமிருந்த கைபேசியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப் பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவலில், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மரிய பால்தினக ரன், ஜோசப் கார்த்திக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
இராமநாதபுரம்,நவ.11- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலை வர் ஜானி டாம் வர்கீஸ், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான குமரிக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் (12.11.2022) வரை பலத்த காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் மணிக்கு 65 கி.மீ வரை காற்றின் வேகம் கூடும் எனவும் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மேற்கண்ட நாள் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நடக்க இருப்பவை
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மதுரை பாலகர் பூங்கா சார்பில் மதுரை சிம்மக்கல் அண்ணா மலை திரையரங்கில் நவம்பர் 13 ஞாயிறன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை குழந்தைகள் சினிமா பார்க்கலாம் வாங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. “CINEMA TICKET” மற்றும் குழந்தைகளுக்கான திரைப் படங்கள் திரையிடப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
தேனி, நவ.11- உத்தமபாளையத்தில் விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 சிறை தண்டனை விதித்து தேனி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம், உத்தமபாளையம், கல்லூரிச் சாலை பகுதியைச் சேர்ந்த விவசாயி காசி விஸ்வநாதன். இவருக்கு கோம்பையில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்கு உத்தமபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் காசி விஸ்வநாதன் விண்ணப்பித்திருந்தார். இலவச மின் இணைப்பு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், வைப்புத் தொகை செலுத்தி கட்டண அடிப்படையில் மின் இணைப்பு பெறுவதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தமபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றிய குபேந்திரன்(53)என்பவரை காசி விஸ்வநாதன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, மின் இணைப்பு வழங்குவதற்கு ஆய்வு செய்ய லஞ்சமாக ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று குபேந்திரன் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவரிடம் பேரம் பேசி ரூ.4 ஆயிரம் லஞ்சம் தருவதாக கூறிவிட்டு வந்த காசி விஸ்வநாதன், இது குறித்து தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி, மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் ரூ.4 ஆயிரத்திற்கான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை குபேந்திரனிடம் காசி விஸ்வநாதன் கொடுத்துள்ளார். அதை குபேந்திரன் பெற்றுக் கொண்டதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாதன், மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குபேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
பெரியகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போதையில் ரகளை:வாலிபர் கைது
தேனி, நவ. 11- பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். வடுகபட்டி, வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் நிலம் வாங்கிய பிரச்னை குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மது போதையில் வந்த செல்வம் மகன் உதயக்குமார்(27), இந்த வழக்கு விசாரணை முடிவடையாமல் இருப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் தான் காரணம் என்று புகார் தெரிவித்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக சுற்றுச் சுவர் கதவை அடைத்தும், காவல்துறையினரிடம் வாக்கு வாதம் செய்தும் ரகளையில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெரியகுளம் காவல் துறையினர் உதயக்குமாரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளன மகளிர் ஆணையத் தலைவர் தகவல்
விருதுநகர், நவ.11- விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட குழந்தை திருமணங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது என மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் முன்னேற்றத்தற்காக கண்மணி, இரும்பு பெண்மணி, உதயம் ஆகிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அதில் உதயம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். மேலும் கடந்த ஆண்டை விட குழந்தை திருமணங்கள் விருதுநகர் மாவட்டத்தில் 25 சதவீதம் குறைந்துள்ளன. அதற்கு காரணம் பலரிடத்தில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதால்தான். பணியிடங்களில் நடைபெறும் பாலியல் குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஐ.சி.சி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளனர். அவர்களிடம் தைரியமாக பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து தெரிவிக்கலாம். இதற்கான விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. அதில், பெண் கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் பங்கேற்றனர். சிறுமிகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் காணாமல் போவது குறித்த கேள்விக்கு? காவல்துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன என தெரிவித்தார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய குழு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி உடனிருந்தார்.
நவ.15 இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், நவ.11- விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் நவம்பர் 15 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வரும் நவம்பர் 15 அன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமை யேற்க உள்ளனர். எனவே, விவசாயிகள் அதில் கலந்து கொண்டு தங்களது பொதுவான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.