கஞ்சா கடத்தலில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது தேனி ஆட்சியர் நடவடிக்கை
தேனி, ஜன.19- கஞ்சா கடத்திய வழக்கில் தொடர்புடைய தேவாரத்தை சேர்ந்த 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் உத்தர விட்டுள்ளார். உத்தமபாளையம் வட்டம் ,தேவாரம் அரண்மனை தெருவைச் சேர்ந்த ராஜாமணி மகன் பாண்டிச்செல்வம் ,நாடார் வடக்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சுப்பிர மணி, சர்ச் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜு ஆகியோர் தொடர்ந்து கஞ்சா கடத்தல் வழக்கில் ஈடுபட்டு வருவதாகவும் ,இவர்கள் மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார்.அதனைத் தொடர்ந்து மேற்கண்ட மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் உத்தரவிட்டார்.
வாலிபரை தாக்கி கண்மாயில் தள்ளி கொலை: 2 பேர் கைது
திருவில்லிபுத்தூர், ஜன.19- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் மேலூர் துப்புரவு பணியாளர் குடியிருப்பில் வசிப்பவர் ராஜு (வயது 40) .இவர் இங்குள்ள மயானத்தில் காவலாளி யாக பணிபுரிந்து வருகிறார் .இவரது மகன் சேது ராஜா (வயது 18) எம்.பி.கே புதுப்பட்டியில் உள்ள ராமர் என்ப வரது சிமெண்ட் கிராதி செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார் . இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு சேது ராஜாவை இவரது நண்பரான கார்த்தி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அன்று சேது ராஜா வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது தாய் மாரி யம்மாள் மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் சேது ராஜா வாலாங்குளம் கண்மாயில் நீர்வரத்து கால்வாய் அருகே பிணமாக மிதந்து கொண்டி ருந்தார். அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர் .போலீசார் நடத்திய விசா ரணையில், சம்பவத்தன்று இரவு சேது ராஜாவும் அவர் நண்பர் கார்த்தியும் வாலாங்குளம் கண்மாய் அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர் அப்பொழுது அங்கு வந்த மம்சாபுரம் மேலூரில் வசிக்கும் இவர்களது உறவி னர்களான வீரமணி, கருப்பசாமி ஆகிய 2 டிராக்டர் டிரை வர்கள் மது அருந்திக் கொண்டிருந்த சேது ராஜாவையும் கார்த்தியையும் கண்டித்தனர் இதில் தகராறு ஏற்படவே வீரமணியும் கருப்பசாமியும் சேர்ந்து சேது ராஜாவை அங்கி ருந்த சுவற்றில் தள்ளிவிட்டனர் இதில் பலத்த காயம டைந்த சேது ராஜா மயங்கி அங்கே இருந்த கண்மாயில் விழுந்து உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.. இதனை தொடர்ந்து வீரமணி, கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்து, விருதுநகர் மாவட்ட சிறைச்சாலையில் அடைத்த னர். மேலும் கார்த்தியை தேடி வருகின்றனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஆண்டிபட்டியில் நெசவாளர் வேலைநிறுத்தம் வாபஸ்
தேனி, ஜன.19- திண்டுக்கல்லில் உள்ள தொழிலாளர் நல இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 18 நாள் நடை பெற்ற நெசவாளர்களின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டி பட்டி ஜக்கம்பட்டி, டி.சுப்புலா புரம் ஆகிய பகுதிகளில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி கடந்த ஜனவரி 2-ஆம் தேதி முதல் சிஐடியு , தொமுச ,அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற் சங்கங்களை சேர்ந்த விசைத் தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டனர். நெசவாளர்கள் ஊதிய உயர்வு குறித்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுலகம், திண்டுக்கல் தொழிலாளர் நலத் துறை இணை ஆணை யர் அலுவலகம் ,தேனி ஆட்சியர் அலுவலகம் ஆகி யவற்றில் விசைத்தறி கூட உரிமையாளர்கள், விசைத் தறி நெசவாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதி களுக்கு இடையே நடை பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் புதன் கிழமை திண்டுக்கல் தொழி லாளர் நலத் துறை இணை ஆணையர் கோவிந்தன் முன்னிலையில் விசைத் தறி நெசவாளர்களின் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விசைத் தறி கூட உரிமையா ளர்கள், நெசவாளர்கள் மற் றும் தொழிற்சங்க பிரதிநிதி களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காட்டன் மற்றும் பாலிஸ்டர் சேலை விசைத் தறி கூடங்களில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்கு 14 சதவீதமும், வீட் டில் விசைத்தறியில் உற்பத்தி செய்யும் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு 10 சதவீதமும் சம்பள உயர்வு கொடுப்ப தாக ஒப்புக்கொள்ளப் பட்டது. இருதரப்பு இடையே பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதாக தெரி விக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொழிற்சங்கத்தி னர் மற்றும் நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட் டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
ஜன.22 இல் காரைக்குடி அழகப்பா பல்கலை., பட்டமளிப்பு விழா
சிவகங்கை, ஜன.19- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழக 33 ஆவது பட்டமளிப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணிக்கு பட்ட மளிப்பு விழா கலையரங்கில் நடைபெற உள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தெரி வித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழக ஆளு நரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்ற வுள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும் அழகப்ப பல்கலைக்கழக துணைவேந்தருமாகிய முனை வர் பொன்முடி விழாவில் பங்கேற்கிறார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி வரவேற்றுப் பேசு கிறார். இப்பட்டமளிப்பு விழாவில் ஒருவர் டைரக்டர் ஆப் லிட்ரேச்சர் பட்டமும், நான்கு பேர் டைரக்டர் ஆப் சயின்ஸ் பட்டமும் ,646 பேர் முனைவர் பட்டமும் பெறுகின்றனர் .மேலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 534 மாணவர்களும் இணைப்புக் கல்லூரியில் பயின்ற 47,198 மாணவர்களும் இணைவைக் கல்வி திட்டத்தின் கீழ் பயின்ற 8,706 மாணவர்களும் தொலை நிலை கல்வி இயக்கத்தின் வாயிலாக பயின்ற 48 ஆயிரத்து 26 மாணவர்களும் சேர்த்து ஆக மொத்தம் ஒரு லட்சத்து 9615 மாணவ மாணவர்கள் பட்டங்கள் பெறுகின்றனர். இதில் 1124 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் நேரடியாக வழங்கப்பட உள்ளது என்று தெரி வித்தார்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி, ஜன.19- சென்னை தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையினை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பி.எஸ் .என் .எல் ஊழியர்கள் தேனி தொலைபேசி நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்திற்கு பெஞ்சமின், முனியாண்டி ஆகி யோர் தலைமை வகித்தனர். சொசைட்டி பிரச்னை, ஊழி யர்களுக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் நிலு வைதொகை குறித்தும் செயலர் ஸ்ரீராமன், முத்துரத்தி னம் விளக்கவுரையாற்றினர். சங்க கிளை செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கண்மாயில் மீன் பாசி குத்தகை எடுப்பதில் வாக்குவாதம்- மறியல்
இராஜபாளையம், ஜன.19- இராஜபாளையம் பகுதியில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களுக்கான மீன்பாசி குத்தகை ஏலம் ராஜபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வாண்டையார்குளத்தில் மீன்பாசி குத்தகை எடுக்க 17 பேர் முன்பணம் செலுத்தி விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 3 பேரின் விண்ணப்பங்கள் நிரா கரிக்கப்பட்டு, 14 பேர் டெண்டருக்கு அழைக்கப்பட்ட னர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் ஏலத்தை ரத்து செய்யக் கோரி மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஏலம் முறையாக நடைபெறும் என உறுதியளித்த பின் பேராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
பொறுப்பேற்பு
சின்னாளப்பட்டி,ஜன.19- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் சின்னா ளப்பட்டியில் செயல் அலுவலராக செல்வராஜ் என்ப வர் பொறுப்பேற்றுக்கொண்டார் அவருக்கு சின்னாளப் பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ் ,துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா மற்றும் தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர் . இதேபோல் வத்தலகுண்டு பேரூராட்சியில் செயல் அலுவலராக வெங்கட்ரமணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பேரூராட்சி சேர்மன் சிதம்பரம், தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்
சிவகங்கை,ஜன.19- சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மது சூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத் திட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது சனிக்கிழமை (21.01.2023) அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவல கங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகா மில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை,நகலட்டை கோரி யும் கைப்பேசி எண் பதிவு,மாற்றம் செய்தல், பொது விநி யோகக்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியா வசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரி விக்கும் பொருட்டும்; தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் கோவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மனு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மது சூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் குப்பைக்கிடங்கில் பற்றியெரியும் தீ புகை மண்டலத்தால் மக்கள் பாதிப்பு குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற சிபிஎம் வலியுறுத்தல்
திண்டுக்கல், ஜன.19- திண்டுக்கல் முருக பவனத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயால் புகை மண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நடவடிக்கை எடுக் காத மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தி னரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண் டித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றிய செய லாளர் சரத்குமார் விடுத்த அறிக்கையில், திண்டுக்கல் மாநகராட்சி எல்லை மற்றும் முருக பவனம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. முருக பவனம் பகுதியில் ஆயிரக்கணக் கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை மக்க வைப்பதற்கு பதிலாக மாநகராட்சி ஊழியர்களே தீ வைத்து எரித்துவிடும் வேலையை செய்கிறார்கள். இதனால் ஏற் படும் புகை மண்டலம் முருக பவனம் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய ஒன்றிய பகுதிகளில் குடியிருப்பவர்களை மிகவும் பாதிக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை சுவாச கோளாறல் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து சாலை மறியல் உள்ளிட்ட பல வகையான போராட்டங்களை நடத்தினர். ஆனால் மாந கராட்சி நிர்வாகம் இந்த குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை .இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை இங்கிருந்து மாற்ற வேண்டும் இல்லையெனில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்த நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.