காது கேளாதோருக்கான ஒலிம்பிக் விளையாட்டில் இறகுப்பந்து விளையாட்டு போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று தற்போது அர்ஜூனா விருதுக்கும் தேர்வாகியுள்ள கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகாவையும், தில்லியில் நடைபெற்ற சர்வதேச கால் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேலூர் வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வர்ஷினியையும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., வாழ்த்துக்களை தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.வீரமணி, செயலாளர் ஆ.பாலமுருகன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் மற்றும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.