தேனி, டிச.21- அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் அறி வியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கிடும் பொருட்டு, “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதனை கருத்தில் கொண்டு, மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 28.11.2022 அன்று வானவில் மன்றம் துவக்கி, வைக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப் பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் 99 அரசு நடுநிலைப்பள்ளி களில் 6-ஆம் வகுப்பு பயிலும் 725 மாணவர்களும், 639 மாணவியர்களும், 7-ஆம் வகுப்பு பயிலும் 653 மாணவர்களும், 221 மாணவியர்களும், 8-ஆம் வகுப்பு பயிலும் 639 மாணவர்களும், 640 மாணவி யர்களும் மொத்தம் 3,971 மாணவ, மாணவியர்களும், 36 அரசு உயர் நிலைப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு பயிலும் 452 மாணவர்களும், 481 மாணவியர்களும், 7-ஆம் வகுப்பு பயிலும் 471 மாணவர்களும், 732 மாணவியர்களும், 8-ஆம் வகுப்பு பயிலும் 484 மாணவர்களும், 398 மாணவியர்களும் மொத்தம் 2,718 மாணவ, மாணவியர்களும் மாணவ, மாணவி யர்கள் வானவில் மன்றத்தின் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.
அதனைப்போன்று, 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு பயிலும் 1,720 மாண வர்களும், 2,004 மாணவியர்களும், 7-ஆம் வகுப்பு பயிலும் 1,800 மாணவர்களும், 1,999 மாணவி யர்களும், 8-ஆம் வகுப்பு பயிலும் 1,857 மாணவர் களும், 2,032 மாணவியர்களும் மொத்தம் 11,412 மாணவ, மாணவியர்களும், என மொத்தம் 205 அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு பயிலும் 2,897 மாணவர்களும், 3,178 மாணவியர்களும், 7-ஆம் வகுப்பு பயிலும் 2,924 மாணவர்களும், 2,952 மாணவியர்களும், 8-ஆம் வகுப்பு பயிலும் 2,980 மாணவர்களும், 3,070 மாணவியர்களும் ஆக மொத்தம் 18,101 மாணவ, மாணவியர்கள் வானவில் மன்றத்தின் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவன் ஜெ.குருநாத் தெரிவிக்கையில், நான் அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றேன். தற்போது, எங்களது பள்ளி யில் வானவில் மன்றம் செயல்படுத்தி வருவதால் அதற்கென தனிவகுப்பறை, பயிற்சி பெற்ற ஆசிரி யர்கள் எங்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த பாடங்களை எளி தில் புரிந்து கொள்ளும் வகையில் செயல்விளக்க முறைகள் மூலம் நடத்தி வருவதால், எனக்கு அறி வியல் மற்றும் கணித பாடங்களில் படிப்பதற்கு எனது ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் அமைந்துள்ளது.
எங்களது பள்ளியில் வானவில் மன்றத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதல மைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரி வித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். தேனி ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீரெங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவன் கனிஷ்கர் தெரிவிக்கையில், ஸ்ரீரெங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரு கிறேன். எங்களது பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் மூலம் எங்க ளது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அறி வியில் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளுக்கு, தனி யாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் செயல் விளக்கங் கள் மூலம் பாடங்கள் நடத்துவது நாங்கள் புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது. இதன் மூலம் எங்களது படிப்பினை தூண்டுவதற்கான அச்சா ணியாக வானவில் மன்றம் அமைந்துள்ளது. மேலும், எங்ளைப் போன்ற ஏழை, எளிய மாணவ, மாணவி யர்களின் கல்வியை மேம்படுத்துகின்ற வகையில், எங்களது பள்ளியில் வானவில் மன்றத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்க ளது பள்ளி மாணவ, மாணவியர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கி றோம் என தெரிவித்தார். இத்தகவலை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டி யன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.