சென்னை,பிப்.6- ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக் கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயி களுக்கு பயிர் நிவாரண உதவி தொடர் பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கனமழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர் கள் நேரில் ஆய்வு செய்ததோடு, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து கனமழை யால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வரை தலைமைச் செயலகத்தில் திங்களன்று (பிப்.6) அமைச்சர்கள் சந்தித்து விளக்கினர். மேலும் அது தொடர்பான அறிக்கையையும் வழங்கி னர்.
அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நல னைக் கருத்தில்கொண்டு, பின்வரும் நிவாரணத் தொகுப்பினை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக் கெடுப்பு வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கி ணைந்து மேற்கொள்ளப்படும். கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 விழுக்காடு மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டே ருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப் படும். நெல் அறுவடை தரிசில் விதைக்கப் பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டே ருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப் படும். நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகி தம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும். கன மழையால் டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறி யியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்தி ரம் வாடகைக்கு வழங்கப்படும். பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்க ளில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப் பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.