தேனி,நவ.11- தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கான தண்ணீரை விவசாயிகள் பயன்பெ றும் வகையில் நவம்பர் 11 வெள்ளியன்று மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் திறந்து வைத்தார். முதலமைச்சர் ,விவசாயிகளின் கோரிக்கை யினை ஏற்று தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கான தண்ணீ ரை திறந்துவிட உத்தரவிட்டதன் அடிப்படையில், 18-ம் கால்வாய் நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கான தண்ணீர் வெள்ளியன்று முதல் 95 கன.அடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 121 மில்லியன் கன அடி தண்ணீர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திறந்து விடப்பட்டுள்ளது. 18-ம் கால்வாய் நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம், பொட்டிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்களும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட ராசிங்கபுரம், சிலமலை, மேல சொக்கநாதபுரம், போடிநாயக்கனூர் ஆகிய 6 கிரா மங்களில் உள்ள 4794.70 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, திறந்து விடப்படும் தண்ணீரை விவசாய பெருமக்கள் குறுகியகால பயிர்களை நடவு செய்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும் அதிகமகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் உத்தமபாளையம் வருவாய் கோட் டாட்சியர் இரா.பால்பாண்டி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற்பொறியாளர் ரமேஷ், தேவாரம் பேரூராட்சித்தலைவர் பா.இலட்சுமி, விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.