districts

மதுரை முக்கிய செய்திகள்

திருவில்லிபுத்தூர்: இரு வீடுகளில் 15 பவுன் தங்க நகை திருட்டு

திருவில்லிபுத்தூர், மே 26- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தன்யா நகரில் பாரதி நகரை சேர்ந்தவர் சதீஷ்(28).  இவர் தனது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.80 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் வந்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த ஆள் இல்லாத மேலும் 4 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.  தன்யா நகரை சேர்ந்த முகமது பெரோஸ்கான். இவரது மனைவி  கயத்தம்மாள்(42). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். முகமது பெரோஸ்கான் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கயத்தம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தனது மகளுடன் மதுரை சென்றார். இந்நிலையில்  அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த பத்தரை  பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது. மேலும் அதேபகுதியில் உள்ள தனியார் வங்கி மேலாளர் புவனேஷ்குமார் உட்பட 2 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. சம்பவ இடத்தில் டி.எஸ்.பி சபரிநாதன் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.  சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள தனியார் நிறுவனத்தின்  பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் பணத்தை  மர்ம நபர்கள் திருடி சென்றனர்.   திருட்டு சம்பவங்கள் குறித்து திருவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழாயூரில் 30 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடுக சிபிஎம்,விசிக, மக்கள் மனு

சிவகங்கை, மே 26- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கீழாயூரில் 30 ஆண்டுகளாக  வசிக்கும் பெரும்பாலான ஆதிதிராவிடர் மக்களுக்கும் ,மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி  இளையான்குடி ஜமாபந்தியில் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது,   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, தாலூகா செயலாளர் ராஜூ, விசிக நகர் செயலாளர் அவையம் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.  இதுகுறித்து தாலுகாச் செயலாளர் ராஜூ கூறுகையில், ஆதிதிராவிட மக்கள் 200 பேருக்கு வீட்டுமனைப் பட்டா கொடுக்கப்பட்டிருந்தது. வீடுகளுக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்பு உள்ளது. வீட்டு வரி கட்டி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து வருவாய்த்துறை உத்தரவிட்டது. அன்று முதல் இந்த வீடுகளுக்கு உரிய சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. வீட்டை விரிவுபடுத்தி கட்ட முடியவில்லை.  இது தொடர்பாக தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இளையான்குடி தாலுகா அலுவலகம் கொடுத்த பட்டாவை ரத்து செய்து விட்ட னர்.இன்னொரு பக்கம் கொடுத்த பட்டாவில் குடியேற முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக ஜமாபந்தி அதிகாரி நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். 

பாவாலி ஊராட்சித் தலைவரைக் கண்டித்து 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் மறியல்

விருதுநகர். மே 26- விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர், விருதுநகர் அருகே உள்ளது பாவாலி ஊராட்சி, இதன் தலைவராக அழகம் மாள் இருந்து வருகிறார். இந்த ஊராட்சிக்கு உட்பட்டு சீனியாபுரம், சந்திரகிரிபுரம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.  இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர், இந்த நிலையில் பஞ்சா யத்து தலைவர் அழகம்மா ளின் இல்ல  திருமண நிகழ்ச்சி க்கு கிராம பொதுமக்கள் பெரும் பகுதி வரவில்லை எனக் கூறப்படுகீறது, இதை யடுத்து  100 நாள் வேலை  திட்டத்திற்கு குறிப்பிட்ட சில ஊர்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரியக் கூடாது என  ஊராட்சித் தலைவி அழ கம்மாள் மற்றும் அவரது கணவர்  தெரிவித்தார்களாம், இதனால் கோபமடைந்த 100 நாள் வேலைத் திட்ட தொழி லாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விருதுநகர்-எரிச்சநத்தம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த ஆமத்தூர் காவல்துறை யினர்  மறியலில் ஈடுபட்ட வர்களிடம் சமாதானப்  பேச்சு வார்த்தை நடத்தினர், பின்பு. அனைவரும் வேலை க்கு செல்லலாம் என உறுதி யளித்ததை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.