10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தேனியில் 15,043 பேர் எழுதுகிறார்கள்
தேனி, ஏப்.1- தேனி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 200 பள்ளிகளைச் சேர்ந்த 15,043 மாணவ -மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி என 200 பள்ளிகளைச் சேர்ந்த 15ஆயி ரத்து 43பேர் தேர்வு எழுத உள்ளனர்.இதில் 7ஆயிரத்து 646 பேர் மாணவர்கள். 7 ஆயிரத்து 397 பேர் மாணவி கள் ஆவர். இவர்களுக்காக 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கம்பம் அருகே சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது
தேனி, ஏப்.1- கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பியை காவல்துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி கிழக்கு ரத வீதியை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ராஜேஸ் கண்ணன்(35). இவரது தம்பி இளவரசன் (வயது 30). இவர்கள் 2 பேரும் தங்கள் பூர்வீக நிலத்தில் ஒன்றாக விவ சாயம் செய்து வந்தனர். ஆனால் இந்த தோட்டத்தை அப கரிக்கும் நோக்கில் இளவரசன் இருந்து வந்துள்ளார். சம்ப வத்தன்று ராஜேஸ்கண்ணன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இளவரசன் தோட்டத்தில் தனக்கு மட்டுமே பங்கு உள்ளது எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் ராஜேஸ்கண்ணனை தலை மற்றும் மார்பில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த ராஜேஸ்கண்ணன் தேனி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை யினர் இளவரசனை கைது செய்து விசாரித்து வருகின்ற னர்.
வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு திருச்சி ரவுடி உட்பட 7 பேர் கைது
தேனி, ஏப்.1- ெரியகுளம் அருகே இரண்டு வாலிபர்களை சரமாரி யாக வெட்டிய திருச்சியை சேர்ந்த ரவுடி உட்பட 7 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள் . தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்க ளத்தை சேர்ந்தவர் வெற்றி வேல். இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனைத் தொடர்ந்து அவர் வடுகபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி பகுதியில் இருந்து வந்த வாலிபர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கி ருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு கும்பலாக வந்த ஒரு தரப்பி னர் வாலிபர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தி யால் வெட்டினர். இந்த தாக்குதலில் ஜெகதீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஜெகதீஸ்வரன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையிலும், முத்துக்குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயமங்கலம் காவல்துறையினர் திருச்சி ரவுடி உட்பட 7 பேரை கைது செய்தனர்.
தேனியில் இலவச அழகுக்கலை பயிற்சி
தேனி, ஏப்.1- தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இலவச அழ குக்கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக . நிலைய இயக்குநர் எம்.தனசேகர பெருமாள் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், இலவச அழகுக்கலை பயிற்சியில் சேர 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியுடன் உணவும் இலவசம். தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை 30 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஆதார் அட்டையுடன் நேரில் முன்பதிவு செய்து கொள்ள வும். மேலும் விபரங்களுக்கு 81909 22599, 95003 14193 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
கார் மீது லாரி மோதி வாலிபர் பலி
தேனி, ஏப்.1- கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் பஞ்சுமலை எஸ் டேட்டைச் சேர்ந்தவர் பிரசன்ன குமார்(32). திருச்சி அருகே துறையூரில் இவரது பெரியப்பா இறந்ததால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்று கொண்டிருந்தார்.காரை ஓட்டு நர் அகில் ஓட்டினார். தேனி மாவட்டம் பெரிய குளம் தேவதானப்பட்டி பரசுராம புரம் பிரிவு அருகே சனிக்கிழ மையன்று அதிகாலை கார் வந்தது. அப்போது ஓட்டுநர் காரை அங்கு நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழிப்ப தற்காக சென்றார். பிரசன்னகுமார் மட்டும் காரில் தூங்கிக் கொண்டிருந் தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில் அருகில் உள்ள பள் ளத்தில் கார் தூக்கிவீசப்பட்டு பிரசன்னகுமார் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சுரேசை கைது செய்து தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
வாடகை தாய் சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைத்திடுக!
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
மதுரை, ஏப்.1- வாடகை தாய் சட்டபடி, வாடகை தாய் தொடர்பான சான்றிதழ்களை பெறுவதற்கு மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த தம்பதிகள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற விரும்பி னர். இது தொடர்பாக அரசின் மருத்துவ வாரிய சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண் டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை சனிக்கிழமையன்று விசாரணை செய்த நீதிபதி ஜி. ஆர். சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவில்,உயிரியல் காரணங்களால் குழந்தை பிறக்க முடி யாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு நவீன விஞ்ஞானம் உதவியுள்ளது. இது உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. கால சூழல் காரண மாக, ஐவிஎப் (IVF )மையங்களில் காளான் களாக உருவெடுத்து உள்ளது. நெறியற்ற முறையில் பரவி வருவதும் ஒரு உண்மை. இத்தகைய மையங்கள் காளான்களாகப் பெருகுவதால் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, உதவி இனப் பெருக்க தொழில்நுட்பத்தை ஒழுங்குமுறை சட்டத்தை நாடாளுமன்றம் நடைமுறைப் படுத்தியது. உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் 2021, மற்றும் வாட கைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021. ஆகிய சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டங்கள், வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்க விரும்பும் தம்பதிகள் தங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய தொடர் நடைமுறைகளை விளக்குகிறது கட்டாயமாக்குகிறது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறு வதற்கு விதிக்கப்பட்டுள்ள வயது மற்றும் பிற நிபந்தனைகளை தம்பதியினர் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் பிரிவு குறித்து உச்சநீதி மன்றத்தில் விவாதத்தில் இருந்த போதே, பிரபல தம்பதிகள் குறிப்பாக சூப்பர் பிர பலங்கள் வாடகைத் தாய் சட்டங்கள் மற்றும் அதன் சிக்கலான நடைமுறைகள் மூலம் குழந்தை பெற்றனர்.
ஏனெனில் வாடகை தாய் சட்டத்தின் படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெரியவில்லை. இந்தச் சட்டத்தின்படி, மத்திய அரசும் மாநில அரசுகளும் முறையே தேசிய வாட கைத் தாய் வாரியம் மற்றும் மாநில வாட கைத் தாய் வாரியங்களை இந்த நடைமுறை களை ஒழுங்குபடுத்த சட்டங்களை இயற் றிய 90 நாட்களுக்குள் அமைத்திருக்க வேண் டும். தமிழ்நாட்டில் அத்தகைய வாரியம் செயல்படுகிறதா? என்பது குறித்து தெளிவு இல்லை. அதைவிட முக்கியமானது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மருத்துவ வாரி யம் அமைப்பதுதான் . இந்த வாரியம் தான் வாடகை தாய் தொடர்பாக தகுதிச் சான்றி தழை வழங்கும். மாவட்டத்தின் தலைமை மகப்பேறு மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவர் மற்றும் தலைமை குழந்தை மருத்துவர் என குறைந்தது இரண்டு நிபு ணர்களை உள்ளடக்கியதாகும். இத்த கைய மாவட்ட வாரியங்கள் அமைக்கப் பட்டதாகத் தெரியவில்லை. வாடகை தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியினரின் தாய்க்கு 23-50 வயது மற்றும் தந்தைக்கு 26-55 வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது. எனவே, வாடகை தாய் சட்டபடி வாடகை தொடர்பான சான்றிதழ்களை பெறு வதற்கு மாவட்டம் வாரியாக மருத்துவ வாரி யம் அமைக்க வேண்டும். உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் விரைந்து தீர்வு காணும் வகையில் அவர்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.வாடகை தாய் சட்டங்கள் குறித்து நீதித் துறை அதிகாரிகளுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் வகையில் மாநில நீதித் துறை அகாடமி ,விழிப்புணர்வு கருத்த ரங்கை நடத்த வேண்டும். மனுதாரரின் மனு வை வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதியைச் சொல்லி மாணவியை திட்டிய பல்கலை. பேராசிரியர் கைது
மதுரை, ஏப்.1- சாதியைச் சொல்லி மாணவியை திட்டிய பேராசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத் தில் கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தில் படிக்கும் முதுநிலை மாணவி ஒருவர் கடந்த மார்ச் 23 அன்று நாகமலை புதுக் கோட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், பல்கலைக் கழக வராண்டாவில் நின்று கொண்டிருந்த போது வரலாற்று துறை பேராசிரியர் சண் முக ராஜா, என்னை சாதியை சொல்லி திட்டியும், என் உருவத்தை கேலி செய்தும் பேசினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான் பல்கலைக்கழக பதிவாளரி டம் புகார் செய்தேன். அவர் உரிய நட வடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் சண்முகராஜா மாணவியை சாதியை சொல்லி திட்டியது உறுதியான தால் அவரை கைது செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரி யர் சண்முகராஜா மீது மாணவிகள் தமி ழக ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ள னர். அதன்பேரில் மதுரை காமராஜர் பல்க லைக்கழகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.
ஆட்டோ ஓட்டுநர் நேர்மைக்கு குவியும் பாராட்டு
தேனி, மார்ச்31- தேனியில் சாலையில் கிடந்த ரூ 40 ஆயிரத்தை ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் எடுத்து காவல் சார்பு ஆய்வளரி டம் ஒப்படைந்தார் .ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு பாராட்டு குவிந்து வருகிறது . தேனி கண்ணாத்தாள் கோயில் தெருவைச் சேர்ந்த வர் மணிகண்டன்(36). ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது ஆட்டோவில் தேனி-பெரியகுளம் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் ரூ.40 ஆயிரம் கிடந்தது. அதை எடுத்து தேனி காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த காவல் சார்பு ஆய்வாளர் ஜீவானந்தத்திடம் பணத்தை ஒப்படைத்தார்.இவரின் நேர்மை குறித்து போலீஸார் பாராட்டினர். பணத்தை தவறவிட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தொடரும் மரபு மீறிய நடவடிக்கை
சிவகாசி, ஏப்.1- விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொண்டார். இதில் இராஜபாளையம் மற்றும் சிவகாசி யில் கல்லூரிகளில் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் துவக்கத்திலும் முடி விலும் தேசிய கீதம் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் புதிய புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை யே பெருவாரியான இடங்களில் பேசி வரும் ஆளுநர் ரவிக்கு தமிழ் நாட்டில் எதிர்ப்புகள் எழுந்து வரு கின்றன. சனாதானத்தை உயர்த்திப் பிடித்து கல்லூரி விழாக்களில் அவர் பேசியதற்கு, முற்போக்கு எண்ணம் கொண்ட பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலம் இவர் சமீபத்தில் தத்துவ மேதை கார்ல்மார்க்சின் சிந்தனை பற்றி அவதூறாக பேசி மாட்டிக் கொண்ட ஆர்.என்.ரவிக்கு தமிழ் நாட்டில் செல்லும் இடங்களில் எல் லம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் கருப்புக் கொடி காட்டி கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்ற னர். இந்தநிலையில், விருதுநகர் மாவட்டத்திற்கு சனிக்கிழமை யன்று வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இராஜபாளையம் மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களில் உள்ள தனியார் கல்லூரி விழாக் களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற் றும் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் துவங்கியதும் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடுவதும். நிகழ்ச்சி முடி வடையும் போது “தேசியகீதம்“ இசைக்கப்படுவதும் மரபாகும். ஆனால் ஆளுநர் ரவி வெள்ளி யன்று பங்கேற்ற இராஜபாளை யம் மற்றும் சிவகாசி கல்லூரி நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீத மும் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த் தும், நிகழ்ச்சி நிறைவடையும் போதும் தேசியகீதம் பாடப்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கு வந்தி ருந்த மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தமிழ்நாட்டின் மரபை மாற்றிய தோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சி துவங்கும் போது ஒரு முறையும் முடியும் போது ஒருமுறை என இருமுறை நாட்டுப் பண்ணை பாடச் செய்ததும் நிகழ்வு துவங்கு கிறதா. முடிகிறதா என்ற குழப் பத்தையும் பலர் மத்தியில் ஏற் படுத்தியது. மேலும் வழக்கமான நடை முறையை மாற்றியது யார் என்றும்? இது ஆளுநரின் வாய் மொழி உத்த ரவா? தமிழ்த்தாய் வாழ்த்தை பின் னுக்குத் தள்ள வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு முன்னும் பின்னும் இருமுறை தேசியகீதம் பாடப்பட்டதா? எனவும் தமிழக மக் கள் கேள்வி எழுப்புகின்றனர்.