மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சென்னை - செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் எஸ்.வி.எஸ்.மணியின் 13ஆம் ஆண்டு நினைவுநாள் சனிக்கிழமையன்று (ஜன.21) அனுசரிக்கப்பட்டது. கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு செயற்குழு உறுப்பினர் ச.லெனின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் நினைவேந்தல் உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் இ.மூர்த்தி, எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், எஸ்.ஜெயசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.