districts

img

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்  115ஆவது பிறந்ததினம்

சுதந்திரப் போராட்ட வீரரும், சாதியப் பாகுபாட்டை எதிர்த்தவரும், குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராகப் போராடியவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்  115ஆவது பிறந்ததினம் மற்றும் 60-ஆவது நினைவு தினம் அக்டோபர் 30 ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. (இடது) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மக்களவை உறுப்பினர் கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் உட்பட பலர் மரியாதை செலுத்தினர். (வலது) மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது  உருவச்சிலைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன், துணைமேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல்  உள்பட பலர்  மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.