மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி (ஜன.30) அன்று சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 108 பேர் இரத்த தானம் செய்தனர். அரசு தலைமை மருத்துவர் கோகுல்பாரதி, கல்லூரி பேராசிரியர்கள் சோ.சுரேஷ், வேல்முருகன், கிளிராஜ் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகி வீரசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.