districts

img

10 ஆண்டுகளுக்கு பிறகு கிடாய் முட்டு சண்டை

மதுரை ஜன 23- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து - கல்லூத்து கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் கிடாய்  முட்டுசண்டை போட்டி அரசு அனுமதியுடன்  நடைபெற்றது. தமிழ்நாடு கிடாய் முட்டு போட்டியா ளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியை மதுரை உயர்நீதிமன்ற கிளை யின் அரசு வழக்கறிஞர்  வீரக்கதிரவன் துவங்கி வைத்தார். உசிலம்பட்டி சட்டமன்ற  உறுப்பினர்  அய்யப்பன், திமுக ஒன்றிய செய லாளர் சுதந்திரம், சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 ஜோடி கிடாய்கள்  பங்கேற்றன.வெற்றி பெற்ற கிடாய்களுக்கு பரிசுகளை விழா கமிட்டியினர் வழங்கினர். கொரோனா பாதுகாப்பு கருதி உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.