districts

img

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10,043 ஹெக்டேரில் இரண்டாம் போக பயிறு சாகுபடி

இராமநாதபுரம், ஜூலை 6- தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது என்பதால் தமிழக அரசு, வேளாண் தொழி லுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் தொழி லினை மேம்படுத்தி வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு  மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் நிலவும் தட்ப வெப்பம், மழையளவு, மண்வளம் ஆகியவற்றிற்கேற்ப பயிர் இரகங்களும், உற்பத்தியை பெருக்கிட நவீன தொழில் நுட்பங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக பெரும் பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வேளாண்மையில் அதிக உற்பத்தியை அடைய,  விவசாயிகளுக்குத் தேவையான பயிர்வாரியான/ பகுதிவாரியான உத்திகளை வகுத்து, கிராமப்புறங் களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறு வடைக்குப் பின் இரண்டாம் போகமாக உளுந்து,

பாசிப்பயறு, தட்டைபயறு போன்ற பயறு வகை பயிர்கள், நிலக்கடலை, எள், பருத்தி, ஆகிய பயிர்களில் இது வரை இல்லாத அளவிற்கு 10,043 ஹெக்டேர் இரண்டாம் போக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,35,886 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள மண் மற்றும் சமூக சூழ்நிலையின் அடிப்படையில் இரண்டாம் போக பயிர் சாகுபடி செய்ய சாதகமாக உள்ள இடங்களில் விவசாயிகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டாம் போகம் பயிர்கள் சாகுபடி செய்து சாதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் போக சாகுபடியில் சிறுதானியங்கள் 15 ஹெக்டேரிலும், உளுந்து , பாசிப்பயறு, தட்டைப்பயறு மற்றும் மின்னிப்பயறு போன்ற பயறு வகைகள் 1342 ஹெக்டேரிலும், நிலக்கடலை 369 ஹெக்டேரிலும், எள் 1290 ஹெக்டேரிலும், சூரியகாந்தி 18 ஹெக்டேரி லும், பருத்தி 7009 ஹெக்டேரிலும், என மொத்தம் 10043 ஹெக்டேர் பரப்பளவில் மாவட்ட அளவில் ஒத்தி சைவு செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் போக பயிறு சாகுபடி செய்தமையால் விவசாயிகளுக்கு கூடு தல் வருவாயும், கால்நடைகளுக்கு தீவனமும், கிடைத்த தது மற்றும் மண்வளமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வா.பெ. வினோத் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தித்தொகுப் பில் தெரிவித்துள்ளனர்.