விருதுநகர், ஜூலை 30- விருதுநகரில் வீடுகளுக்குள் புகுந்து விடும் பாம்புகளை பணம் கொடுத்தால் மட்டுமே பிடிக்கப்படும் எனப் பேரம் பேசுவதாக ஏராளமா னோர் பகிரங்கமாக புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது, புறநகர் பகுதிகளில் வீடுகளின் விரிவாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதர் கள், செடிகொடிகளுக்குள் வசித்து வந்த பாம்புகள் மழை பெய்யத் தொடங்கியதும் குடியிருப்புகளுக் குள் புகுந்து விடுகின்றன. இதையடுத்து, வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் அலறியடித்து வீட்டை விட்டு வெளி யேறுகின்றனர். பின்பு, தங்களது உற வினர்களிடம் இதுபற்றி தெரிவித்து சிலர் லாவகமாக பாம்புகளை வீட்டில் இருந்து வெளியேற்றி விடுவர். ஆனால், பலருக்கு பாம்புகள் என்றாலே பயம். இதன் காரணமாக, தீயணைப்பு நிலையத்திற்கு தங்க ளது செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கின்றனர். தகவல் அறிந்த தும், விரைந்து வருகின்ற தீய ணைப்புத்துறையினர், வீட்டில் உள்ள பாம்பை பார்த்து விடுகின்ற னர். பின்பு, தங்களை அழைத்துப் பேசிய அந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்கின்றனர்.
அதன் பிறகு, அந்த பாம்பின் வகையைக் கூறுகின்றனர். அதைப் பிடிக்க வேண்டுமெனில் தங்களுக்கு பணம் வழங்கினால்தான் பிடிக்க முடியும் என பேரம் பேசுகின்றனர். பேரம் படிந்த பிறகே, பாம்பைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் நகராட்சியின் பின்புறம் அருளப்பன் தெருவில் உள்ள வீடு ஒன்றில் பாம்பு புகுந்துள்ளது. இதுகுறித்து வீட்டின் உரிமை யாளர், தீயணைப்புத்துறைக்கு தக வல் தெரிவிக்க, அவர்கள் நேரில் வந்து பாம்பைப் பார்த்துள்ளனர். அது கட்டுவிரியன் எனத் தெரிந்ததும், வீட்டு உரிமையாளரிடம், இது நச்சுத் தன்மையுள்ளது. 2 அல்லது 3 அடிக்கு மேல் தாவும். இதைப் பிடிக்க ரூ.2 ஆயிரம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளனர். அவரோ, ஆயிரம் தான் தர இயலும் எனக் கூற, அதன் பிறகே பணத்தைப் பெற்றுக் கொண்டு பாம்பை பிடித்துள்ளனர். அதேநாளில், காந்தி நகர் பகுதி யில் கருநாகத்தை பிடிக்க ரூ.3 ஆயி ரத்தை கையூட்டாக பெற்ற பின்பே, அதைப் பிடித்துள்ளனர். இதேபோல், சாரைப் பாம்பை பிடிக்க வேண்டுமெ னில் ரூ.2 ஆயிரம் வரை வாங்கி விடு கிறார்களாம். தீயணைப்புத்துறையினரின் இச்செயலானது, மக்களின் அச்ச உணர்வுகளையும், உயிர் பயத்தை யும் பேரம் பேசி பணம் பறிப்பது போல் உள்ளது. எனவே, இதுபோன்ற இழி வான செயல்களில் ஈடுபடும் தீய ணைப்புத்துறையினர் மீது தமிழக அரசு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.