districts

img

பஞ்சமி நிலக்கொள்ளையர்களுக்கு எதிராக பழனியில் ‘என் நிலம், என் உரிமை’ போராட்டம்

திண்டுக்கல். டிச.24- பஞ்சமி நிலக்கொள்ளை யர்களுக்கு எதிராக என்  நிலம் என் உரிமை என்ற  முழக்கத்துடன் போராட்டம் தொடங்க உள்ளதாக அய்ய லூரில் தோழர் ஆர்.கண்  ணன் படத்திறப்பு நிகழ்ச்சி யில் மாநிலச்செயற்குழு உறுப்  பினர் மதுக்கூர் இராமலிங் கம் அறிவித்தார்.  திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினரும், விவ சாயத் தொழிலாளர் சங்கத்  தின் மாவட்டப் பொருளாளரு மான மறைந்த தோழர் ஆர். கண்ணன் படத்திறப்பு நிகழ்ச்சி வெள்ளியன்று நடை பெற்றது. கட்சியின் மாநிலச்  செயற்குழு உறுப்பினர் மதுக் கூர் இராமலிங்கம் படத்தை  திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். அவர் பேசியதாவது:  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இல்லையென் றால் 100 நாள் வேலைத்திட்  டம் இல்லை. ஆனால் இத்  திட்டத்தில் சம்பளத்தை குறைத்துக் கொடுக்கிறார் கள். பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான ஒன்றிய  அரசு கிராமப்புற மக்களுக் கான இந்த திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியை கொஞ்சம்  கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வருகிறார்.  வருகிற 30 ஆம் தேதி பழ னியில் விவசாயிகள் சங்கம்,  விவசாயத் தொழிலாளர் சங் கம் சார்பில் என் நிலம் என்  உரிமை என்ற கோரிக்கை யை முன்வைத்து மாநாடு நடத்த உள்ளோம். அது ஒரு போராட்டத்தை அறி விக்கும் மாநாடாக இருக்  கும். திண்டுக்கல் மாவட்டத்  தில் ஏராளமான நிலப்பிரச்ச னைகள் உள்ளன.

சாதாரண ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பிரிட்டிசார் ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட நிலம் தான்  பஞ்சமி நிலம். அந்த நிலம்  அந்த மக்களிடம் இப்போது  இல்லை. அந்த நிலத்தையும் நிலக்கொள்ளையர்கள் அப கரித்து விட்டார்கள். அந்த  நிலங்களை தலித் மக்க ளுக்கு கொடுக்க வேண்டும் என்று போராட உள்ளோம். கம்யூனிஸ்ட்டுக்கள் நிலத்  திற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்  கொண்டே இருக்கிறோம். பழனியில் நடைபெறும் மாநாடு மூலம்  அந்த போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசி னார்.  இந்நிகழ்ச்சியில் ஒன்றி யக்குழு உறுப்பினர் எம்.கே. சம்சுதீன் தலைமை வகித்  தார். மாநிலக்குழு உறுப்பி னர் என்.பாண்டி, மாவட்டச்  செயலாளர் ஆர்.சச்சி தானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், பி.வசந்தா மணி, கே.அருள்செல்வன், டி.முத்துச்சாமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முத்துச்சாமி, சி. குணசேகரன், ஒன்றியச்செய லாளர் மலைச்சாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  குடும்ப உதவி நிதி ரூ.2 லட்சம் வழங்கல்  தோழர் ஆர்.கண்ணன் குடும்ப பாதுகாப்பு நிதியாக  ரூ.2 லட்சத்தை அவரது மகள் சரண்யாவிடம் சிபிஎம் தலை வர்கள் மதுக்கூர் இராம லிங்கம், என்.பாண்டி, ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் வழங்கினர்.