districts

img

மதுரையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

மதுரை, பிப்.3-  மதுரை மாவட்டம், விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரி யில் பிப்ரவரி 3 அன்று தமிழ் இலக்கியம், கலை, இயற்கையுடன் இயைந்த வாழ்வு உள்ளிட்ட பல்வேறு தரவுகளில் தமிழ்மொழி மீது பற்று கொண்ட 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர்கள் பங்கேற்ற ”மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், எழுத்தாளர் -மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், எழுத்தா ளர்-திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட  ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் பேசு கையில், தமிழக பண்பாட்டின் பெருமை யை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கிய மான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் சிறந்த சொற்பொழிவா ளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  

இந் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு  முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  எழுத்தாளர்-திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், இலத்தீன், சமஸ்கிருதம், ஹீப்ரு ஆகிய மொழிகளை எவரும் நடைமுறை வாழ்க்கையில் பேச்சுமொழியாய  பேசப்படுவதில்லை. ஆனால்,  2 ஆயி ரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் மனிதர்களால் பேசப்படுகின்ற மொழி தமிழ் மொழியும், சீன மொழி யும் ஆகும்.  மனித உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருக்கின்றன. வாயிலி ருந்து வரும் சொற்களாவது நறுமணம் மிக்கதாக இருக்க வேண்டும் என்று  புத்தர் கூற்றாகும். சொற்கள் நறுமண மாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லுகின்றேன். 2 ஆயிரம் ஆண்டு களைக் கடந்தும் இன்றும் மனிதர்க ளால் பேசப்படுகின்ற மொழியாக சீனமும், தமிழும் விளங்கி வரு கின்றது என்றார்.   இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், கல்லூரிக்கல்வி மண்டல இணை இயக்குநர் பொன் முத்துராமலிங்கம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அர விந்த் அவர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர் பெருமக்கள்  பலர் கலந்து கொண்டனர்.