பெரம்பலூர், டிச.25- பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல் மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 8-ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் ஹேமா வரவேற் றார். துணைத்தலைவர் சி.மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ரஞ்சனா மற்றும் திருச்சி மின்வாரிய பொருளாதார கட்டுப்பாட்டாளர் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். பள்ளி துணை முதல்வர்கள் சாரதா செந்தில்குமார், சந்திரோதயம், எம்.ராஜேந்தி ரன், விளையாட்டு முகவர்கள் பிரபு, ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.