districts

img

ஆ.இராசா எம்.பி.யின் மனைவி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

பெரம்பலூர், மே 30 - திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா.எம்.பி. பெற்றோர்களான ஆண்டிமுத்து- சின்னப்பிள்ளை ஆகி யோரது மணி மண்டபத்தை திறந்து வைத்து, ஆ.இராசா மனைவி மு.அ.பர மேஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்தப் பட்டது.  29.5.2022 அன்று ஆ.ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூர் அருகே வேலூரில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், பெரம்பலூர் மாவட்ட  கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்தி ரன், ஆராசாவின் மகள் மயூரி இராசா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்  எம்.பிரபாகரன், அரியலூர் சட்டமன்ற  உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண் டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க. கண்ணன் உட்பட அரசு அதிகாரிகள், திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.