பெரம்பலூர், அக்.26 - தமிழ்நாடு அரசின் கூட்டு றவுத் துறையும் இந்தியன் ஆயில் நிறுவனமும் புரிந்து ணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டு, தமிழ்நாடு முழு வதும் 5 கிலோ எடை கொண்ட தடையில்லா வணிக எரிவாயு உருளை களை நியாய விலை அங்காடிகளில் விற்பனை செய்யும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை-எளிய நடுத்தர பெண் வியாபாரிகள் பயன்பெறும் வகையில், குடும்ப அட்டை தாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 5 கிலோ எடையிலான வணிக எரிவாயு உருளைகள் வழங் கும் விழா புதனன்று நடை பெற்றது. துறைமங்கலம் நியாய விலைக் கடையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா, பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள 197 முழு நேரக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்கள் அதிகம் உள்ள 3 பகுதி நேரக் கடை களிலும் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இந்த எரி வாயு உருளைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா என முறையான ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு, அனைத்து விதமான ஒப்புதலையும் பெற்றே வழங்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை வணி கர்களும் பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத் திக் கொள்ள வேண்டு மென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கூட்டு றவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் க.பாண்டியன், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஜெய பிரகாஷ், பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.