districts

img

பெரம்பலூரில் சட்ட விழிப்புணர்வு முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய நீதிபதி

பெரம்பலூர், நவ.11 - சட்டமன்ற ஆணைக் குழு  வழிகாட்டுதலின்படி, 11.11. 2022 அன்று சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. நாட்டு மக்கள் அனை வரும் சட்டம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உரி மைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற  நோக்கில்தான் சட்டப்பணி கள் ஆணைக்குழு செயல் பட்டு வருகிறது.  அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணை ந்து நடத்திய சட்ட உதவி  மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாமில் முதன்மை மாவட்ட  நீதிபதி அ.பல்கீஸ், ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா ஆகி யோர் தலைமை வகித்தனர்.  இதில், தொழிலாளர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை மற்றும் திருமண உதவித்தொகை என 25 பய னாளிகளுக்கு ரூ.2.9 லட்சம்  மதிப்பிலான காசோலை களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, உலமாக் களுக்கான மிதிவண்டிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின நல அலுவ லகத்தின் சார்பில் 2 பயனாளி களுக்கு தையல் இயந்திரங் களும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 2 விவ சாயிகளுக்கு விதைக்கான ஈடுபொருட்களும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யின் மூலம்  5 மாற்றுத்திற னாளிகளுக்கு காது கேட்கும் கருவி என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.5.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.