districts

நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

பெரம்பலூர், செப்.17 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 23வது அமைப்பு தினத்தையொட்டி பெரம்ப லூர் மாவட்டத்தில் சனிக் கிழமை குன்னம், வேப்பந் தட்டை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் கொடியேற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. குன்னத்தில் உட்கோட்ட தலைவர் குணசேகரன், வேப் பந்தட்டையில் உட்கோட்ட தலைவர் டி.பழனிசாமி, பெரம்பலூரில் உட்கோட்ட  தலைவர் காட்டுராஜா ஆகி யோர் தலைமை வகித்தனர். அதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் துறைமங்க லத்திலுள்ள அன்பகம் சிறப்பு  பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவி கள் சுமார் 50 பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.  பின்னர் பெரம்பலூர் கோட்ட  பொறியாளர் அலுவல கத்தில் கவன ஈர்ப்பு விளக்க கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பி.ராஜ் குமார் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் சி.சுப்ர மணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சாலைப் பணியாளர் களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இறந்தோர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன. கோட்ட பொருளாளர் கே. கருணாநிதி நன்றி கூறினார்.

;