districts

img

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவை

பெரம்பலூர், நவ.30-  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர்  நல அமைப்பு பெரம்பலூர் கிளை சார்பில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்  பின் சிறப்பு பேரவை கூட்டம் செவ்வாயன்று பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிஐ டியு அலுவலகத்தில் நடைபெற்றது.  வட்டக் கிளை தலைவர் எ.எஸ்.சம்பத் தலைமை வகித்தார். வட்டக்கிளை செயலா ளர் ரெ.இராஜகுமாரன் வரவேற்றார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின்,  மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன் ஆகியோர் விளக்கிப் பேசினர். மாநில துணைத்தலைவர் ஜி.பஷீர் சிறப்புரை ஆற்றினார். வட்டக் கிளை பொருளாளர் சி.கண்ணையன் நன்றி கூறினார்.  மின்வாரியம் மற்றும் பொதுத்துறைகள் பொதுத்துறைகளாகவே நீடித்திட வேண் டும், வாரிய செயல்முறை ஆணை எண் 2-ஐ ரத்து செய்திட வேண்டும், தடையின்றி ஓய்வூதியம் கிடைத்திட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.