பெரம்பலூர், மார்ச் 13- பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்றது. அப்போது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சிகூர் பார்டர் கிராம பொதுமக்கள், மாதர் சங்க நிர்வாகி சின்னபொண்ணு, சிபிஐ மாவட்ட நிர்வாகி ஜெய ராமன் ஆகியோர் தலைமை யில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், ‘‘அகரம் சிகூர் பார்டர் கிராமத்தில் அரசு மதுபானக்கடை எண் 6423 செயல்பட்டு வருகிறது. இதில் நடத்தப்படும் பார் 24 மணிநேரமும் செயல்படு வதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பொது மக்களுக்கு பல்வேறு இடை யூறு ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி சின்னப்பொன்னு தலைமை யில் ஜனவரி 21 அன்று கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய போது சம்பந்தப் பட்ட அரசு அலுவலர்கள் உட னடியாக அகற்றப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை கடையை அகற்ற எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. எனவே ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கடையை வேறு இடத் திற்கு மாற்ற வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், இது குறித்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.