பெரம்பலூர், நவ.27 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெரம்பலூர் மாவட்ட 4 ஆவது மாநாடு ஞாயிறன்று லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எம்.சக்திவேல் அஞ்சலி தீர்மானமும், வழக்கறிஞர் ஸ்டாலின் வரவேற்பு உரையும் ஆற்றினர். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் துவக்க உரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.கருணாநிதி மாநாட்டு அறிக்கை வாசித்தார். திராவிடர் கழகம் அக்ரி ஆறுமுகம், லட்சுமி மருத்துவமனை மரு.சி.கருணாகரன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், மாவட்ட தலைவர் ரெங்கநாதன், மாவட்ட பொருளாளர் அ.கலையரசி, விசிக விவசாய பிரிவு வீரசெங்கோலன், வழக்கறிஞர் ப.காமராசு, மாணவர் சங்க மாவட்ட தலைவர் கருணைக்கடல், வாலிபர் சங்கம் எஸ்.கே.சரவணன், சிபிஎம் நகர செயலாளர் சிவானந்தம், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.செல்லகண்ணு நிறைவுரை ஆற்றினார். பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக எஸ்.பாஸ்கரன், செயலாளராக ஆர்.கோகுலகிருஷ்ணன், பொருளாளராக எம்.கருணாநிதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பி.கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.