பெரம்பலூர், ஜூலை 15 - பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 44-வது ஒலிம்பி யாட் செஸ் போட்டி - 2022 குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வெள்ளியன்று செஸ் போட்டியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ.வெங்கடபிரியா முன்னிலை வகித்தார். பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவிக்கையில், “44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியா வில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளி லேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளை யாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சர்வதேச தரத்திலான இந்த போட்டியை நேரில் காணவும், கிராண்ட் மாஸ்டர்கள் உடன் விளையாடி, அவர்களிடம் உரை யாடி செஸ் பயிற்சி பெறவும் இது ஓர் அரிய வாய்ப்பு. இந்த போட்டி குறித்த விழிப்பு ணர்வை பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகை யில் அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடை பெறும். இப்போட்டியில் முதல் இடம்பெறும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் ஒலிம்பி யாட் போட்டியை காண தேர்ந்தெடுக்கப் படுவர். முதல் 25 இடங்களை பெறும் ஆண்கள் மற்றும் 25 பெண்களுக்கு ஒலிம்பி யாட், தமிழ்நாடு அரசு ஏஐசிஎப் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள் வழங்கப்படும். புதிதாக ஏஐசிஎப் பதிவு செய்பவர்கள் https://prs.aicf.in/new-register என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்” என்றார்.