பெரம்பலூர், பிப்.13 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 21 வார்டுகளை கொண்ட பெரம்பலூர் நகராட்சியின் 16 ஆவது வார்டு வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எ.கலையரசி போட்டி யிடுகிறார். அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், 16 ஆவது வார்டுக்கான தேர்தல் அலுவல கத்தை ஞாயிறன்று துறையூர் ரோடு சுவாமி திரையரங்கம் அருகே பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன் திறந்து வைத்து கலைக்குழுவினரு டன் வேட்பாளர் கலையரசிக்கு அப்பகுதியில் வாக்குகள் சேகரித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரமேஷ், விசிக மாநில நிர்வாகி இரா. கிட்டு, 17 ஆவது வார்டு திமுக வேட்பாளர் துரை.காமராஜ், கிளை செயலாளர்கள் ஜெயக்குமார், முத்துக்குமார், கரும்பு விவசாயி கள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், தமுஎகச மாவட்ட செயலாளர் ப. செல்வகுமார் மற்றும் கூட்டணியினர் கலந்து கொண்டனர்.