districts

img

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கிராமத் திட்ட ஊழியர்கள் கோரிக்கை

புதுச்சேரி, மார்ச் 21- கிராமத் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தொழிலாளர் காப்பீட்டு திட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி னார். அரசு ஊழியர் சங்கங்க ளின் சம்மேளன கவுரவத் தலை வர் பிரேமதாசன், தலை வர் ரவிச்சந்திரன், பொதுச்செய லாளர் ராதாகிருஷ்ணன், பொரு ளாளர் கிரிஸ்டோபர், செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம் ஆகியோர் பேசினர்.