districts

img

பாடம் நடத்தாத பேராசிரியர் எதற்கு? கல்லூரி மாணவிகள் சாலை மறியல்

புதுச்சேரி,ஜன.10- ஒப்புக்காக இருக்கும் பேராசிரியரை விடுவிக்ககோரி கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் புதுச்சேரி வில்லியனூரில் உள்ள கஸ்தூரிபாய் பெண்கள் கலைக் கல்லூரி யில் சமூக செயல்பணி துறை மாணவி களுக்கு பேராசிரியர் எம்.எஸ்.ஷஜி பாடம் நடத்துவதில்லை என்றும், கள ஆய்வு செய்து ஒப்படைக்கும் ரெக்கார்டு நோட்டில் கையொப்பம் இடுவதில்லை. எனவே பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு பதிலாக மாற்று பேராசிரியரை நியமிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் இயக்குநர் ஆகியோரிடம் பல முறை மனு அளித்தும், இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை.எனவே அந்த பேராசிரியரை பணியில் இருந்து விடு விக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற மறியலில் செயலாளர் பிரவீன்குமார், இணைச் செயலாளர் வந்தனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துணை ஆட்சியர் உறுதி
முன்னதாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது துணை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் என கூறியதன் அடிப்படையில், அவரை சந்திக்க ஏற்பாடு செய்தனர். துணை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.