districts

img

பஞ்சாலைகளை இயக்கக்கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, மார்ச் 28- புதுச்சேரியின் பாரம்பரியமான பஞ்சாலைகளை புனரமைத்து இயக்கக் கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் நிதி உதவியை பெற்று  ஏ.எப்.டி., சுதேசி, பாரதி ஆகிய பாரம்பரிய மான பஞ்சாலைகளை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும். புதுச்சேரி இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்ககூடிய பஞ்சாலைகளை பாதுகாக்க வேண்டும். பஞ்சாலைகளை மூடும் முடிவை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட் டம் நடைபெற்றது. ஏஐடியூசி மாநிலத் தலைவர் அபிஷேகம் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள், சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சேதுசெல்வம், ராமசாமி, குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.