புதுச்சேரி, டிச. 4- பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு பாஜக அரசை வீழ்த்துவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோதண்டபாணி தெரிவித்தார். புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்க ளின் சம்மேளனத்தின் 47ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் முல்லை நகரில் ஆலோசகர் சீதாராமன் தலைமையில் ஞாயிறன்று (டிச. 4) நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சா.கோதண்டபாணி கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 2014 ஆம் ஆண்டு வரை நாட்டை ஆண்ட ஒன்றிய அரசுகள் ரூ.54 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்தனர். அப்போது இந்தியர்கள் தலையில் தலா 35 ஆயிரம் ரூபாய் கடன் இருந்தது. அதற்குப் பின்பு 8 ஆண்டுகளாக ஆட்சி யில் இருக்கும் பாஜக அரசு 46 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி யுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் 135 கோடி பேர் செலுத்த வேண்டிய கடன் தொகை இரண்டு மடங்காக அதவாது ரூ. 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுதான் மோடி ஆட்சியின் சாதனை.
10 லட்சம் கோடி
ஒன்றிய பாஜக அரசு தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் வராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. இது மாணவன் கல்வி பயில கடன் வாங்கி செலுத்த வேண்டிய தொகை இல்லை. மாறாக விவசாயிகள் வாங்கிய கடனும் இல்லை. பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனைத் தான் தற்போது வராக்கடன் என்று அறிவித்து தள்ளுபடி செய்துள்ளனர். எனவேதான் இந்த ஆட்சி தொடர்ந்தால் இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக கடனாளிகளாகமாற்றப்படுவார்கள். அத்தகைய நிலையை தடுப்ப தற்கு சம்மேளனத்தின் ஸ்தாபக தலைவரும் மறைந்த தோழர். சி.எச் பாலமோகனன் கடைபிடித்த போராட்ட குணம்சத்தை நாம் ஊழியர்களிடம் தீவிரப்படுத்த வேண்டும். அதன் மூலம்தான் மக்களுக்கு எதிரான கொள்கைகளை தடுக்க முடியும் என்றார். இதில் சம்மேளனத்தின் தலை வர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் கிறிஸ்டோபர், கீதா, ஆனந்த கணபதி, பாலசுப்ரமணியன், ஞான சேகரன், முன்னாள் தலைவர் சண்மு கம், தமுஎகச வின் மாநில குழு உறுப்பினர் விநாயகம் உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சம்மேளனக் கொடியை மூத்த தோழர் நமச்சி வாயம் ஏற்றி வைத்தார். கவு ரவத் தலைவர் பிரேமதாசன் தலை மையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மறைந்த தலைவர் சி.எச்.பால மோகனனின் பெயரில் கலைக்குழு பயிற்சி மையம் துவங்கும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.