புதுச்சேரி, மார்ச் 9- புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் வியாழக் கிழமை (மார்ச் 9) அன்று துவங்கியது. முதல்வர் ரங்கசாமியின் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு புதுச்சேரிக்கு “நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும்- இரவல் ஆளுநர் வேண்டாம்” என துண்டுபிரசுரத்துடன் முழக்கம் எழுப்பினார். பின்னர் வெளி நடப்பு செய்தார். இதனால் சிறிது நேரம் பேரவைகூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் ஆளுநர் தமிழிசை வாசித்த உரையில்,“நிதி மேலாண்மை யைப் பொருத்த வரையில் 2022-23 நிதியாண்டில் ஒன்றிய அரசின் கூடுதல் நிதி உதவியாக ரூ.1400 கோடி கிடைக்கப் பெற்றது. 2022-23 இல் நிதி ஆண்டில் மொத்த செலவினங்களுக்காக ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக ரூ. 39,019 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது”என்றார். ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி யில் உயிரி தொழில் நுட்பவியலில் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்த பொது அறிவியல் ஆய்வக வசதி நிறுவ ரூ. 2 கோடி வழங்கப் பட்டது. இலவச அரிசி திட்டத்திற்கு 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ. 200 கோடி செலவிடப்பட்டு 3.53 லட்சம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். சமூக பொருளாதாரத்தில் முன்னேறி, வறு மையை போக்குவதில் அரசு உறுதியாகவுள்ளது. அனைத்து பிராந்தியங்களிலும் நிதியை பகிர்ந் ்தளித்து பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை போக்கியுள் ளது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து, இக்கூட்டத்தொடர் மார்ச் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் செல்வம் கூட்டத்திற்கு பின்னர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.