districts

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்  ஆளுநர் உரையுடன்  ஜூலை 31 ல்  துவங்குகிறது

புதுச்சேரி, ஜூலை 25- புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் வியாழக்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5வது கூட்டம், வரு கிற ஜூலை 31-ம் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் உரையுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.12,700 கோடிக்கான வரவு,செலவு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார் என்றார். மேலும் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் ஒன்றிய அரசின் நிதி முழுவதுமாக செலவு செய்வது இல்லை என்றும், மக்கள் தொகை குறைவாக உள்ள கட்சத்தீவில் ஒன்றிய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் மூலம் ரூ.1,500 கோடி நிதி முழுவதுமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட ரூ.33 கோடி நிதியில் ரூ.1 கோடி மட்டும் செல விடப்பட்டு மீதமுள்ள ரூ.32 கோடியை அதி காரிகள் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பி யுள்ளனர் என்றும், காகிதம் இல்லாத சட்ட பேரவைக்கு ஒன்றிய அரசு ரூ.8.16 கோடி  ஒதுக்கியுள்ளதாகவும்,  இந்த பட்ஜெட்டை காகிதமில்லா வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்ய முயற்சி களை எடுத்து வருகிறோம் என்றார். மேலும் இலவச அரிசி வழங்குவதற்காக தலைமை செயலாளர் ஒப்புதல் வழங்கி டெண்டர் விடப்பட்டுள்ளதாக பேரவை தலைவர் செல்வம் தெரிவித்தார்.

விண்ணப்பம் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
கள்ளக்குறிச்சி,ஜூலை 25- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்,ஒன்றிய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று இலவச தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படை வீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் உரிய சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி தங்களது பெயரினை பதிவு செய்து இலவச தையல் இயந்திரம் பெற்று பயனடைமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.