districts

img

புதுச்சேரியில் ரூ.500 மதிப்பிலான 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு

புதுச்சேரி,டிச.22- புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.500 மதிப்பிலான 10 பொருட்கள் அடங்கிய இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- பொங்கலை முன்னிட்டு ரூ.500 மதிப்புள்ள மஞ்சள், பச்சரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, முழு உளுந்து, பச்சை பயிறு, முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் மற்றும் வெல்லம் ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்புகள் 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். இதற்காக ரூ.17 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது இதற்கான ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. இந்தப் பொருட்களை அங்கன்வாடிகள் மூலம் விநியோகிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 60 விழுக்காடு சிவப்பு அட்டைக்கு மேல் இருக்கக் கூடாது என ஒன்றிய அரசு அறிவுறுத்தி யுள்ளளது. அதன்படி, புதுச்சேரி யில் 60 விழுக்காடு சிவப்பு அட்டை தாரர்களும், 40 விழுக்காடு மஞ்சள் அட்டைதாரர்கள் உள்ளனர். புதுச்சேரியில் விதிகளை மீறி வைத்திருந்த மாநில அரசு ஊழியர்கள் 14 ஆயிரம் பேர் குடும்ப அட்டைகள் நீக்கப் பட்டுள்ளன. இதேபோல் ஒன்றிய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது சிவப்பு அட்டை வைத்திருந்தால், உடனே அவர்களது அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ஆய்வு செய்து ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.