புதுச்சேரி, ஜூலை 4- புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்க ளுக்கு ஊதியம் உயர்வை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதி யத்தை ரூ.10,804 லிருந்து ரூ.16,796 ஆகவும், ஒப்பந்த நடத்துநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,656 லிருந்து ரூ. 16.585 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள ஊதிய உயர்விற்கான ஆணையை வெளிட்டார். முன்னதாக உயர்த்தப்பட்ட இந்த மாத ஊதியத்திற்கான ஆணையினை முதல்வர் ரங்கசாமியை சந்தித்த போக்கு வரத்து ஆணையரும், புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான சிவக்குமார் வழங்கினார். இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், புதுச்சேரி சாலைப் போக்கு வரத்து கழகத்தின் பொது மேலாளர் (நிர்வாகம்) கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தார்.