புதுச்சேரி, மார்ச் 20- மின் துறையை தனியார் மயமாக்குவது தான் அரசின் கொள்கை முடிவு என்று மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்ததை அடுத்து, சட்டப் பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக பேரவை யில் நடைபெற்ற விவாதம்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா: புதுச்சேரி அரசின் மின் துறைக்கு சொந்தமான இடங்கள், மின் சாதனங்கள், தளவாடப் பொருட்களின் மொத்த மதிப்பு எவ்வளவு? நுகர்வோரிடம் பெறப் பட்ட வைப்பு நிதி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா? மின்துறைக்கு அரசு துறைகள், தொழிற்சாலைகள், வீட்டு உபயோ கச் சந்தாதாரர்களிடம் நிலுவையி லுள்ள மின் கட்டண பாக்கி எவ்வளவு? மின்துறை அமைச்சர் நமச்சி வாயம்: மின் துறையின் நிகர சொத்தின் மதிப்பு, தேய்மானம் போக சுமார் ரூ.551 கோடியாகும். நுகர்வோரின் வைப்பு நிதி டெபாசிட் செய்யப்படவில்லை. மின் கட்டண பாக்கி ரூ.536.7 கோடியாகயுள்ளது. சிவா: மின் துறையை தனியார் மயமாக்கிவிட்டீர்களா? அமைச்சர்: இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலுள்ளது. மின் துறையை தனியார் மயமாக் குவதுதான் அரசின் கொள்கை முடிவு. எல்லா மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள் என தெரிவித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் செய்துவிட்டார்களா? முதல்வ ரின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பி, மின் துறை தனி யார்மயம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதை எதிர்த் தும், கண்டித்தும் வெளிநடப்பு செய்வதாக சிவா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திமுக, காங்கி ரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.