districts

img

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வரும் ஊசுடு ஏரி

புதுச்சேரி, பிப். 20- புதுவையின் மிகப் பெரிய ஏரியாக ஊசுடு ஏரி உள்ளது. புதுவை யின் குடிநீர் தேவைக்கு பயன்படுவது மட்டு மின்றி பறவைகள் சரணாலய மாகவும் திகழ்கிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் படகு குழாமும் உள்ளது. சுற்றுலா பயணிகள் அமைதி யான சூழலில் படகு சவாரி செய்து பறவைகளை கண்டு ரசிப்பது வாடிக்கையாகும். சமீப காலமாக ஊசுடு ஏரி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வரு கிறது. குருமாம்பேட் பாண்லே முதல் பத்துக் கண்ணு சந்திப்பு வரை தெரு விளக்குகள் முறையாக எரிவதில்லை. இதை பயன் படுத்திக்கொண்டு அந்த வழியாக திருக்கனூர் செல்லும் பொதுமக்களிடம் ரவுடிகள் வழிப்பறி நடத்தி வருகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த ஏரியின் கரை யோரத்தில் இரவில் மது அருந்துவோரின் எண்ணிக் கையும் அதி கரித்து வரு கிறது. மது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும் சமூக விரோதிகள் அந்த வழியாக செல்வோரிடம் தகராறில் ஈடுபடுவது, செல்போன், பணம், நகை பறிப்பில் ஈடு படுகின்றனர்.  மேலும் சமூக விரோதி களுக்குள் ஏற்படும் தகரா றால் சட்ட ஒழுங்கும் சீர்கெடு கிறது. இந்நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்கழ கத்துக்கு சொந்தமான 3 படகுகளை சமூக விரோதி கள் குடிபோதை யில் தீ வைத்து எரித்துள்ளனர். எனவே அரசு இந்த பகுதி யில் அனைத்து தெரு விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து வெளிச்சம் மிகுந்த சாலையாக்க வேண்டும். காவல் துறை யினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.