districts

img

விவசாயத்தை மோடி அரசு அழிக்கிறது விவசாய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

புதுச்சேரி,டிச.19- இந்திய விவசாயத்தை ஒன்றிய மோடி அரசு அழித்து வருகிறது என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட் குற்றம் சாட்டினார். சங்கத்தின் புதுச்சேரி மாநில 7ஆவது மாநாடு வில்லியனூரில் தோழர் தி.தெய்வானை நினை வரங்கத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆ.வின்சென்ட் தலைமை தாங்கினார். சங்கக் கொடியை என்.எம்.கலியபெருமாள் ஏற்றி வைத்தார்.  அகில இந்திய பொதுச்செயலாளர் பி.வெங்கட் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், “நாட்டின் முது கெலும்பாக விவசாயிகளும், விவ சாயத் தொழிலாளர்களும் உள்ளனர். அத்தகைய விவசாயத்தை கார்ப்ரேட் பன்னாட்டு பகாசூர நிறு வனங்களுக்கு தாரைவார்க்க ஒன்றிய பாஜக அரசு துடிக்கிறது. இதை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை திசை திருப்ப மத மோதல்களை உருவாக்குகிறார்கள். எனவே பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டி போராட வேண்டும்”என்றார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைளை அம்பலப்படுத்தும் வகையில் பொது மக்கள், விவாசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் திரட்டி வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த மாநாட்டில் செயலாளர் த.தமிழ்ச்செல்வன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழ் மாநில துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின், விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் வே.சங்கர், சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னார்கள். சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மூத்த தலைவர்கள் எல்.கலிவரதன், திவ்யநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
தீர்மானங்கள்
நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, தினசரி ஊதி யத்தை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், வேளான் துறையின் கீழ் இயங்கும விவசாயத் தொழிலாளர் சங்கத்தை செயல்படுத்த வேண்டும், மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்  
மாநிலத் தலைவராக ஆ.வின்சென்ட், செயலாளராக த.தமிழ்ச்செல்வன், பொருளாளராக மா.தட்சணாமூர்த்தி, துணைத் தலை வர்களாக வினாயகம், இன்னரசு, இணைச் செயலாளர்களாக அரிதாஸ், பால்ராஜ் உட்பட 21 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.