புதுச்சேரி,மார்ச் 6- புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அந்த சிறுமியை கடத்தி சென்ற சமூக விரோதிகள் சிலர் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொன்று கை, கால்களைக் கட்டி சாக்கடையில் வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அச்சிறுமி, நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். புகார் கொடுத்ததும் காவல் துறை யினர் உரிய விசாரணை மேற்கொண்டிருந்தால் சிறுமியை உயிரோடு மீட்டு இருக்க முடியும் என்றும்; முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் அலட்சியப் போக்கே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தை கஞ்சா போதையில் இருந்த நபர்கள் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது மக்களை கோபத் தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த கொடூரமான சம்ப வத்திற்கு காரணமான குற்றவாளி களை கடுமையாக தண்டிக்க வலி யுறுத்தி புதனன்று (மார்ச் 6) புதுவை யில் பெரும் போராட்டம்வெடித்தது.
மாதர் சங்கம் ஆவேசப் போராட்டம்
சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் கொதித்தெழுந்த மக்கள் அனைத்தி ந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு எதிரில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதில் உரையாற்றிய மாதர் சங்கத் தலைவர்கள், “புதுச்சேரி என். ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. மேலும், மாநி லம் முழுவதும் ரெஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் பார்களை திறப்ப தற்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் புதுச்சேரியில் சமூக குற்றங்கள் மேலும் அதிகரித்துவிட்டன” என்று கடுமையாக சாடினர்.
இந்த போராட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனி யம்மாள் தலைமை வகித்தார். சங்கத்தின் அகில இந்திய செயற் குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், புதுச்சேரி நிர்வாகிகள் இளவரசி, சத்தியா, மாரிமுத்து உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்ட னை பெற்று கொடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ரெஸ்ட்ரோ பார்களை மூட வேண்டும். கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையை முழுமை யாக தடைசெய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்.
சட்டமன்றம் - ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம்
இந்நிலையில், உருளையன் பேட்டை கண் டாக்டர் தோட்டம் பகுதி யைச் சேர்ந்த பெண்கள் சட்டப்பேர வைக்கு வந்தனர். இதில் 2 பேர் கை குழந்தைகளை அழைத்து வந்த னர். அவர்கள், குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என கோஷ மிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அந்நேரத்தில் முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவைக்கு வந்தார். இதனால் பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாய மாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆவேசமடைந்த அந்த பெண்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
அதேபோல் நேரு சிலைக்கு பின்புறம் இருந்து திராவிடர் கழகத்தி னர் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்தனர். பாரதி பூங்கா அருகில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள், சிறுமி பாலியல் வன் கொலையை கண்டித்து ஆர்ப்பா ட்டம் நடத்தினர். அதேபோல் பாகூர், காலாப்பட்டு, புதுச்சேரி நகர பகுதிகளில் ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள் சார்பில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடலில் இறங்கி கோஷம்
சிறுமி கொலை வழக்கில் நீதி வழங்கக் கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கடற் கரைச் சாலை காந்தி சிலை முன்பு ஒன்று கூடினர். அப்போது குற்ற வாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடை யில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுபோன்று புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
2 பேர் கைது
கொலையாளிகளை பிடிக்க போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்திய நிலையில் புதனன்று முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.
கடந்த 2-ம் தேதி வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறு மியை, சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டுக்கு கரு ணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலி யல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள் ளார். அதே நேரத்தில் வீட்டுக்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டியதோடு, உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டுக்கு பின் புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் போட்டு உள்ளே இழுத்துவிட்டு சென்றுள்ளனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
ரூ.20 லட்சம் நிவாரணம்
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்து க்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ள முதல்வர் ரங்கசாமி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் பெற்றோரிடம் உறுதி அளித்தார்.