புதுச்சேரி, நவ.11- புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால் மக்க ளின் இயல்புவாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. வடக்கிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக புதுச்சேரி முழுவதும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் புதுச்சேரி, மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. புதுச்சேரி முழுவதும் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர்
புதுச்சேரி நகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளான கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர் மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பாவனர்நகர், எல்லைபிள்ளைச்சாவடி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடியாமல் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதேபோல் பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் விவ சாய நிலங்களில் மழைநீர் தேங்கி யுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது. எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் அலை சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிள்ளைச் சாவடி கிராமத்தில் தூண்டில் முள் வளைவு அமைக்காததால் ஏற்கனவே இரு சாலைகள், 100 தென்னை மரங்கள், 100 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மக்களின் தொடர் போராட்டத்தால் இங்கு கல் கொட்டும் பணி நடந்தது. 300 அடி தூரம் கல் கொட்டி சாலை அமைக்கும் சூழலில் காலை முதல் அலை சீற்றத்திற்கு அவை கடலுக்குள் இழுத்து செல்லப்படுகின்றன. மேலும் 5 குடிசை வீடுகளும் 5 தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன. சாலையோர மின் கம்பங்கள், குடியிருப்பு பகுதியில் இருந்த குடிநீர் குழாய்களும் அடித்துச் செல்லப்பட்டன. அரசு சார்பில் கட்டித்தந்த மீன்வலை காப்ப கத்தின் தரைத்தளத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து அலை சீற்றம், கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தொழிலாளர்கள் பாதிப்பு
கனமழையின் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள், மினிலோடு வாகனம் ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள், அன்றாடம் கூலிவேலை செய்து வருபர்கள், கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வாதரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.