புதுச்சேரி,ஜன.6- மின் விநியோகத்தை தனியார்மய மாக்க சொத்துகளை நிர்வகிக்க விரைவில் புது நிறு வனம் புதுச்சேரியில் அமைக்கப்பட வுள்ளது. இச்சூழலில் 49 சதவீத பங்கு களை மட்டும் அரசு வைத்துக் கொள்ள உள்ளது. யூனியன் பிர தேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கியது. இதைக் கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழி யர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனி யார்மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனிடையே, தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த ஆண்டு பிப்ர வரியில் தொடங்கினர். தொழிற் சங்கத்தினரிடம் கலந்து ஆலோ சிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம் என்ற முதல்வர் ரங்க சாமியின் வாக்குறுதி ஏற்று வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர். இந்நிலையில், மின்துறை தனி யார் மயத்துக்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது. அதையடுத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டம் தீவிரமடைந்ததால் முதல்வர் ரங்கசாமியை அழைத்து பேசியதால் தீபாவளி வரை போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் போராட்டக்குழுவினர் வழக்குத்தொடர்ந்தனர். இந்நிலையில், மின் விநி யோகத்தை தனியார்மயமாக்க அதன் சொத்துகளை நிர்வகிக்க விரை வில் புது நிறுவனம் அமைக்கப் படவுள்ளது. இதுதொடர்பாக உயர் அதி காரிகள் கூறுகையில், “புதுச்சேரி மின்துறையின் சொத்துகளை நிர்வகிக்க புதிய நிறுவனம் தொடங்க அரசு முன்மொழிந்துள்ளது. பரி மாற்றம் செய்யப்படும் சொத்துக ளில் மின் அமைப்புகள், ஆலை கள், இயந்திரங்கள், கேபிள்கள், கம்பிகள், துணை மின்நிலையங்கள், மின்மாற்றிகள், கோபுரங்கள், மீட்டர்கள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் (நிலம் உட்பட) மற்றும் நிறுவல்கள் உள்ளிட்டவை அடங்கும். மின்விநியோகம் மற்றும் சில்லரை விநியோகத்தை பிரிக்கி றோம். அத்துடன் 51 விழுக் காடு பங்குகளை மாற்றி 49 விழுக்காடு பங்குகளை அரசே தக்கவைத்துக்கொள்ள ஆலோ சித்து வருகிறது. இதுபற்றி நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பிர மாண பத்திரத்திலும் பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்த னர்.