districts

img

கட்டண உயர்வு: சுங்கச்சாவடி முற்றுகை

புதுச்சேரி, ஏப். 1- ஒன்றிய அரசு சுங்கச் சாவடி கட்டணத்தை உயர்த்தி அறி வித்துள்ளதைக் கண்டித்து புதுவை - திண்டிவனம் புறவழிச் சாலையிலுள்ள மொரட்டாண்டி லாரி உரிமையாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். பாண்டிச்சேரி லாரி உரிமை யாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜெண்ட் சங்கம் மற்றும் கூட்ட மைப்பு சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்துக்கு சங்கத் தலை வர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஏற்கனவே டீசல் விலை உயர்வால் டிரான்ஸ்போர்ட் தொழில் நலிவடைந்த நிலை யில் ஆண்டுதோறும் சுங்க கட்ட ணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி வருவதால் டிரான்ஸ் போர்ட் தொழில் மிகவும் பாதிப்படைவதாகவும், தற்போது உயர்த்திய சுங்க கட்டணத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.