புதுச்சேரி,பிப்.14- ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் புதுச்சேரி மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் புதுச்சேரி மாநில 5 வது மாநாட்டிற்கு துணைத் தலைவர் நாரா. கலைநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் ஆர்.எஸ் ஜீவானந்தம் அறிக்கையை சமர்ப்பித்தார். வரவு-செலவு அறிக்கை பொருளாளர் சம்பத் தாக்கல் செய்தார். ஒருமைப்பாட்டு கழகத்தின் செயலாளர் ஹர்ஜன் சிங்பட், பொதுச் செயலாளர் அருண் குமார் ஆகி யோர் கருத்துரை வழங்கினர்.
நிர்வாகிகள்
இந்த மாநாட்டில் தலைவராக நாரா. கலைநாதன், பொதுச் செயலாளர்களாக ஆர்.எஸ்.ஜீவானந்தம், சுதாசுந்தரராமன், பொருளாளராக சம்பத், துணைத் தலைவர்களாக தா.முருகன், நீல.கங்காதரன் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரியில் மதவெறி அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.ஒன்றிய அரசின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரி அரசு, அரசு கல்வியை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.