districts

img

மணக்குள விநாயகர் கோவில் யானை மரணம்

புதுச்சேரி, நவ. 30- புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை நடைபயிற்சியின் போது திடீரென கீழே விழுந்து உயிரிழந்தது. 1996ஆம் ஆண்டு 5 வயதில் லட்சுமி என்ற யானை புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜானகிராமன் முயற்சியால் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அந்த யானைக்கு வயது (32)வழக்கம்போல் புதனன்று (நவ. 30) விடியற்காலை நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. அப்போது அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்று கொண்டிருக்கும் போது, திடீரென மயங்கி கீழே விழுந்து, சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தது. பின்னர் கிரேன் உதவியோடு யானை யின் உடலை கோவில் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.