புதுச்சேரி, டிச. 7- போக்குவரத்து முக்கி யத்துவம் வாய்ந்த புதுவை - கடலூர் சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் தினசரி சாலை விபத்துகளில் பலர் காயமடைந்தும், உயி ரையும் இழந்து வருகின்ற னர். இந்நிலையில் குண்டும் குழியுமான சாலையை செப்பனிட தவறிய புதுவை பொதுப்பணித்துறை அதி காரிகளையும் ஆட்சியாளர் களை கண்டித்தும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிருமாம் பாக்கம் காவல் நிலையம் முன்பு புதனன்று (டிச. 7) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அண்மையில் பெய்த மழையால் புதுவை கடலூர் சாலை யில் முள்ளோடை வரை சாலை குண்டும் குழியு மாக மாறிவிட்டன. இத னால் தினசரி இந்த சாலை யில் விபத்துக்கள் நடை பெறுகின்றன. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே உடனடி யாக சாலையை சீரமைக்க வேண்டும். சாலை படுமோச மாக உள்ள நிலையில் போக்குவரத்து காவல்துறை யினர் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி செய லாளர் சரவணன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், மாநில செயற் குழு உறுப்பினர்கள் பெரு மாள், பிரபுராஜ், மாநிலக் குழு உறுப்பினர் கலி யன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் கொம்யூன் கமிட்டி உறுப்பினர்கள் வடிவேல், கலைச்செல்வன், கவுசி, அரிதாஸ், கிளைச் செயலாளர்கள் முருகை யன், வெங்கடேசன், விபத்தில் சிக்கிய பெண் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதி யில் காவல் துறை அதிகாரி களிடம் மனு அளித்தனர்.