districts

img

சிபிஎம் மாநில மாநாடு: புதுச்சேரியில் கொடியேற்றத்துடன் பிரச்சாரம் துவங்கியது

புதுச்சேரி, மார்ச் 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு குறித்த பிரச்சாரம் புதுச்சேரி முழுவதும் கொடி யேற்றத்துடன் துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 23 வது தமிழ் மாநில மாநாடு மார்ச் 30ல் துவங்கி மூன்று நாள் மதுரையில் நடை பெறுகிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தில் (மார்ச் 23) மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையிலும், 23வது மாநாட்டை குறிக்கும் வகையிலும் 23 கொடிகள் ஏற்றப்பட்டன. புதுச்சேரி பிரதேசம் முழுவதும் கட்சி கிளைகள் சார்பில் கொடி யேற்றி மாநாட்டு பிரச்சாரம் துவங்கியது.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி காந்தி வீதியில் நடைபெற்ற மாநாட்டு கொடி ஏற்றும்  நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற் குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கலிய மூர்த்தி,நகர கமிட்டி செய லாளர் மதிவாணன், கிளை செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உழவர்கரை
புதுச்சேரி உழவர்கரை நகர குழு சார்பில் பெத்து செட்டி பேட்டையில் நடை பெற்ற கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் ராம்ஜி செயற்குழு உறுப்பின ர்கள் கொளஞ்சியப்பன், சத்தியா மற்றும் பிரதேச குழு உறுப்பினர் ஆனந்த் உட்பட உழவர்கரை நகர குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன்
மதகடிப்பட்டில்  மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டி செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். கொடி யேற்றத்துடன் துவங்கிய மாநாட்டு பிரச்சாரத்தை செயற்குழு உறுப்பினர் சீனி வாசன் துவக்கி வைத்து பேசினார். பிரதேச குழு உறுப்பினர் சங்கர் கமிட்டி உறுப்பினர்கள் விநாயகம், முத்து, தட்சிணாமூர்த்தி, விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். பிரச்சாரம் மண்ணாடிப்பட்டு,  திருபுவனை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் நடை பெற்றது.
வில்லியனூர்
கரிக்கலாம்பாக்கத்தில், வில்லியனூர் நெட்டப் பாக்கம் கமிட்டி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.
பாகூர்
பாகூரில், கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச குழு உறுப்பினர் கலியன், கொம்யூன் ழுழு உறுப்பினர்கள் வடி வேல், கவுசி, கிளைச் செய லாளர்கள் முருகையன் வெங்கடாசலம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். புதுச்சேரி முழுவதும் நடை பெற்ற மாநாட்டு கொடி யேற்றம் பிரச்சார இயக்கத்தில் கட்சி கிளை செயலாளர்கள் பிரதேச குழு உறுப்பினர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.