districts

img

புதுச்சேரி மின்துறையை கண்டித்து சிபிஎம் நடத்திய குடியேறும் போராட்டம்

புதுச்சேரி, ஜூன் 19 - மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மின்துறை அலுவல கத்தில் மின்சாதன பொருட்களுடன் குடி யேறும் போராட்டம்  நடைபெற்றது.

 என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அண்மையில் வீடு களுக்கான மின்சார கட்டணத்தை திடீ ரென உயர்த்தி உள்ளது. விலைவாசி உயர்வால் அன்றாடம் பாதிக்கப் பட்டுள்ள புதுச்சேரி மக்கள் மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே உயர்த்திய கட்ட ணத்தை திரும்ப பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரு கிறது.

தீப்பந்த ஊர்வலம்

காந்தி வீதியில் நடைபெற்ற தீப்பந்த ஊர்வலத்திற்கு சிபிஎம் புதுச்சேரி நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாநில செய லாளர் ராஜாங்கம் , மாநில குழு மூத்த உறுப்பினர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கலியமூர்த்தி , பிரபுராஜ், சத்தியா உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள்  சரவணன் சஞ்சய்சேகரன்,முனி யம்மாள், நகர கமிட்டி  உறுப்பினர்கள் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்ற னர். முன்னதாக நேருவீதி, காந்திவீதி சந்திப்பிலிருந்து தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து முழக்கங்களை எழுப்பினர்.

காடா விளக்குகளுடன்  போராட்டம்

திருக்கனூர் கடைவீதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம்  மண்ணாடிபட்டு கொம்யூன் கமிட்டி செயலாளர் இரகு. அன்புமணி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சீனுவாசன், மாநில குழு உறுப்பினர் சங்கர், கமிட்டி  உறுப்பினர்கள் உட்பட பலர் ஆர்ப்பா ட்டத்தில் பங்கேற்றனர் முன்னதாக கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி காடா விளக்குகளை ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

குடியேறும் போராட்டம்

பாகூர் மின்துறை இளநிலை பொறி யாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற குடியேறும் போராட்டத்திற்கு சிபிஎம் பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில   செயற்குழு உறுப்பினர் பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்து பேசி னார். மாநிலக் குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். மின் கட்டண உயர்வைதிரும்ப பெற கோரி பாகூர் கடைவீதியில் இருந்து மின்சாதன பொருட்களுடன் , மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில்  குடி யேறுவதற்கு ஊர்வலமாக வந்த வர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.