districts

img

மாசு ஏற்படுத்தும் தனியார் துறைமுகம் முற்றுகை

காரைக்கால், மார்ச் 16- காரைக்காலிலுள்ள தனியார் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் காற்று மாசு ஏற்படுவதாகக் கூறி துறைமுகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் தனியாருக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது. இங்கிருந்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல் நமது நாட்டிற்கு தேவையான பொருட்கள் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களால் அதன் அருகில் உள்ள கிராமங்களில் காற்று மாசு ஏற்படுவதாகவும், மேலும் இங்கிருந்து வெளியேறும் காற்று மாசினால் இப்பகுதி மக்களுக்கு சுவாச குழாய் தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது என்றும் கூறி அப்பகுதி மக்கள் திடீரென துறைமுக வாயில் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.